நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த கட்டுரை. நண்பர் @oorkkaaran அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் தாமதத்திற்கு மன்னிப்பும் எழுதத்தூண்டியதற்கு நன்றியும் பண்டைய பாரதத்தின் சமூகம் தொழில் அடிப்படையில் நான்கு வர்ணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், அந்தப் பிரிவுகள் அவ்வளவு கறாராக ஆரம்பத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதைக் காண்கிறோம். புராண இதிகாச காலங்களை எடுத்துக்கொண்டால் போர்த்தொழில் புரியும் க்ஷத்திரியரான கௌசிகர் வேதங்களைப் படித்து இராஜரிஷியாகவும் பின்னர் பிரம்மரிஷி விஸ்வாமித்திரராகவும் ஆகிவிட்டார். வேடனான வால்மீகி ரிஷியாகப் போற்றப்படுகிறார். அதேபோல் பிராமணரான பரசுராமர், போர்வேடம் பூண்டு க்ஷத்திரியர்களுடன் போர் புரிந்ததைப் பார்க்கிறோம். இப்படிப் பல உதாரணங்கள். இந்த வகையில் பிராமணராகப் பிறந்தாலும் போர்த்தொழில் புரிந்தவர்களை க்ஷத்திரியப் பிராமணர்கள் என்று குறிக்கும் வழக்கம் வந்தது. மகாபாரதத்தில் வரும் துரோணரும், கிருபரும், துரோணரின் மகனான அஸ்வத்தாமனும் குருக்ஷேத்திரப் போரில் பெரும் பங்கு வகித்தார்கள். பரசுராமர் பீஷ்மருக்கும் கர்ணனுக்கும் போர்க்கலைய