Skip to main content

Posts

Showing posts from September, 2017

திருமங்கை ஆழ்வாரின் காலம்

ஆழ்வார்களிலேயே அவரது காலம் இன்னது என்று தெளிவாகத் தெரியக்கூடியது திருமங்கை ஆழ்வாரின் காலம்தான். ஆனாலும் ஒரு பரம்பரைக் கதை அவர் திருஞானசம்பந்தரைச் சந்தித்ததாகக் கூறுவதால் பலருக்கு இந்த விதத்தில் குழப்பம் நேரிடுகிறது. முதலில் திருஞானசம்பந்தரின் காலத்தைப் பார்ப்போம். இவர் திருநாவுக்கரசரின் சமகாலத்தவர் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. அப்பரின் முதிய காலத்தில் சிறுவயதினரான சம்பந்தரோடு பல இடங்களுக்குச் சென்று பதிகங்கள் இயற்றியதைப் பற்றி பெரிய புராணமும் மற்றும் பல நூல்களும் குறிப்பிடுகின்றன.  மகேந்திர பல்லவரை சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றியது நாவுக்கரசர் என்பதால் அவருடைய காலத்தில் பிற்பகுதியில் சம்பந்தர் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதில் ஐயமில்லை. சிறுத்தொண்டரான ' மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாபித் தொன்னகரம் துகளாகச்' செய்த பல்லவ தளபதி பரஞ்சோதியை ஞானசம்பந்தர் சந்தித்தது பற்றியும் குறிப்புகள் உண்டு. எனவே சம்பந்தர் நரசிம்மவர்மரின் சமகாலத்தவர் என்பது வெள்ளிடைமலை. அதேபோல, சமணரான கூன்பாண்டியனை சைவத்திற்கு சம்பந்தர் மாற்றினார் என்பதற்கும் ஆதாரங்கள் பல உண்டு. கூன்பாண்டி