Skip to main content

Posts

Showing posts from 2016

சகலகலாவல்லி மாலை

வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத் தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித் துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1 நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற் காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 2 அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற் குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3 தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும் தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4 பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென் நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத் தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக் கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. 5 பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான் எண்ணும் பொழுத

சரஸ்வதி துதி - பாரதியார்

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள், வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் கொள்ளை இன்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத் திருப்பாள், உள்ளதாம் பொருள் தேடி யுணர்ந்தே ஓதும் வேதத்தின் உள் நின் றொளிர்வாள், கள்ள மற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசகத் துட்பொருளாவாள்  1 மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள், மக்கள் பேசும் மழழையில் உள்ளாள், கீதம் பாடும் குயிலின் குரலைக் கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள், கோத கன்ற தொழிலுடைத் தாகிக் குலவுச் சித்திரம் கோபுரம் கோயில் ஈதனைத்தின் எழிலடை யுற்றாள் இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்  2 வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள், வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லா வித்தை யோர்ந்திடு சிற்பியர், தச்சர் மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர் வீர மன்னர் பின் வேதியர் யாரும் தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம் தரணி மீதறி வாகிய தெய்வம்.   3 தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம் தீமை காட்டி விலக்கிடுந் தெய்வம், உய்வ மென்ற கருத்திடை யோர்கள் உயிரி னுக்குயி ராகிய தெய்வம், செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர் செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம், கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம், கவிஞர் தெய்வம்

சரஸ்வதி அந்தாதி - கம்பர்

காப்புச் செய்யுள்  ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்  ஏய உணர்விக்கும் என் அம்மை - தூய  உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே  இருப்பள் இங்கு வாராது இடர்.  படிக நிறமும் பவளச் செவ்வாயும்  கடிகமழ்பூந் தாமரை போற் கையும் - துடியிடையும்  அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்  கல்லும் சொல்லாதோ கவி.    நூல்-  கலித்துறை  சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கமலாசனத் தேவி செஞ்சொல்  தார்தந்த என் மனத்தாமரையாட்டி, சரோருகமேல்  பார்தந்த நாதன் இசைதந்த வாரணப் பங்கயத்தாள்  வார்தந்த சோதியம் போருகத்தாளை வணங்குதுமே. .. 1  வணங்கும் சிலைநுதலும் கழைத்தோளும் வனமுலைமேல்  சுணங்கும் புதிய நிலவெழுமேனியும் தோட்டுடனே  பிணங்கும் கருந்தடங் கண்களும் நோக்கிப் பிரமன்பால்  உணங்கும் திருமுன்றிலாய் மறைநான்கும் உரைப்பவளே. ..2  உரைப்பார் உரைக்கும் கலைகளெல்லர் மெண்ணில் உன்னையன்றித்  தரைப்பால் ஒருவர் தரவல்லரோ தண்தரளமுலை  வரைப்பால் அமுது தந்திங்கெனை வாழ்வித்த மாமயிலே  விரைப்பா சடைமலர் வெண்டாமரைப்பதி மெல்லியலே. .. 3  இயலானது கொண்டு நின்திருநாமங்கள் ஏத்துதற்கு  முய

ராஜராஜனின் மெய்க்கீர்த்தி

பண்டைக்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும்  செப்பேடுகளையும் அவர்களது பரம்பரையைப் பற்றிய புகழுரைகளுடைன் ஆரம்பிப்பது வழக்கமாக இருந்தது.  பெரும்பாலும் இதில் புராணங்களிலிருந்தும், பல செயற்கரிய செயல்களை அவர்களது முன்னோர்கள் செய்ததாகவும் குறிப்பிடுவது உண்டு. கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி  'அடித்து விடுவது' சகஜம். உதாரணமாக பாண்டியர்களின் கல்வெட்டு ஒன்றில், ராமாயணம் நடந்த காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியன், ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் சமரசம் புரிந்து வைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போன்ற வெற்றுப் புகழுரைகளை விட்டு, மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக)  பொறிக்கும் வழக்கம், முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும்.  இந்த மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டுக்கல்வெட்டுகளிலிருந்து , அதாவது பொயு 993ஆம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள் , அவர்களது ஆட்சிக்காலத்தில்,

அம்மன் காசு

'அவன் கிடக்கான்டா, அம்மஞ்சல்லிக்குப் பிரயோசனமில்லாத பய' என்று ஊர்ப்பக்கத்தில் சொல்வது வழக்கம். அம்மன் சல்லி அல்லது அம்மன் காசு என்று அழைக்கப்படும் இந்தக் காசு யாரால், எப்போது  வெளியிடப்பட்டது ? நாயக்கர் ஆட்சியில் தமிழகம் பல பாளையங்களாகப் பிரிக்கப்பட்ட போது, அதில் ஒன்றான ராமநாதபுரம் வலுவடைந்து சேதுபதிகளின் ஆட்சியின் கீழ் வந்தது. சேதுபதி அரசர்களில் முக்கியமானவரான கிழவன் சேதுபதி (பொயு 1679)  தனது அரசை இரண்டாகப் பிரித்து புதுக்கோட்டை சமஸ்தானத்தை உருவாக்கினார். தனது மைத்துனனான ரகுநாதத் தொண்டைமானை அதற்கு அரசராகவும் நியமித்தார். கிழவன் சேதுபதியின் காலத்திற்குப் பிறகு வந்த தொண்டைமான் அரசர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் நெருங்கிய நட்புப் பூண்டிருந்தனர். அதன் விளைவாக, தங்களுடைய அரசில் சொந்தமாக நாணயம் அச்சிட்டு வெளியிடும் உரிமையையும் பெற்றனர். அப்படி அவர்கள் வெளியிட்ட நாணயம்தான் அம்மன் காசு. புதுக்கோட்டை மன்னர்கள் அந்நகரில் உறையும் பிரகதாம்பாள் மேல் பக்தி பூண்டவர்கள். அதன் காரணமாகவே 'பிரகதாம்பாள்தாஸ' என்ற முன்னெட்டையும் தங்கள் அபிஷேகப் பெயரில் சேர்த்துக்கொண்டவர்கள். எனவே

வாரசூலை

ஜோதிட சாஸ்திரத்தில் சூலம், சூலை என்று அழைக்கப்படும் ஒரு பிரிவு இருக்கிறது. பயணம் செய்யும்போது, குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் பயணம் செய்யும்போது சூலம் பார்க்கவேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. இந்த சூலம் என்றால் என்ன? எப்படி இதை அறிந்து கொள்வது ? வார நாட்கள் ஏழிலும் ஒவ்வொரு கோள்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது நாம் அறிந்தது. ஞாயிறன்று சூரியன், திங்களன்று சந்திரன் என்று அந்தந்தக் கிழமைகளில் அதற்குரிய கோள்களின் ஆதிக்கம் அதிகம்.   பன்னிரண்டு ராசிகளில்,  இந்தக் கோள்கள் ஒவ்வொன்றிற்கும் உச்ச ராசி, அதாவது அதன் சக்தி அதிகமாக இருக்கக்கூடிய ராசி என்று ஒன்று உண்டு. அதேபோல, நீச்ச ராசி அதாவது கோள்களின் சக்தி குறைவாக இருக்கக்கூடிய ராசி வீடுகளும் உண்டு.  இப்போ நாம் நமது வீட்டில் 'பவர்புல்லாகவும்'  மாமியார் வீட்டில் கப்சிப்பென்றும் இருப்பது போல (பெண்ணியவாதிகள் மன்னிக்க).  இந்த ராசிகள் ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட திசையின் ஆதிக்கமும் உண்டு.   இந்தத் தகவல்களை பின்வரும் அட்டவணையிலிருந்து அறியலாம். இதிலிருந்து ஒவ்வொரு கோளுக்கும் எந்த திசையில் சக்தி அதிகம் என்றும் எந்த திசையில் சக்தி

அக்னி நட்சத்திரம்

கொளுத்தும் கோடையின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிவிட்டது . கத்தரி வெய்யில் என்று பொதுவாக அழைக்கப்படும் இந்தக் காலம் வருடத்தில் வெப்பம் மிக அதிகமாக உணரப்படும் நாட்களைக் கொண்டது . இந்தக் காலகட்டத்தில் மக்கள் தங்கள் வெளிவட்டார நடவடிக்கைகளைக் குறைத்துக்கொண்டு கோடைக்கே உரிய முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டால் வெயிலின் கொடுமையிலிருந்து ஓரளவு தப்பிக்கலாம் .  கோடையின் இந்தக் கடுமையான பகுதியை கணித்து மக்கள் தங்களை அதனிலிருந்து தற்காத்துக்கொள்ளவே நம் முன்னோர்கள் அக்னி நட்சத்திரத்தை ஒரு வானிலை முன்னறிவிப்பாகப் பயன்படுத்தினார்கள் . பொது வழக்கில்,   ' சித்திரை பின் ஏழு வைகாசி முன் ஏழு ’  என்று சொன்னாலும்  உண்மையில்  கத்தரி வெயில் இந்தக் கணக்குக்கு பொருந்தி வருவதில்லை . இந்த வருடத்தையே எடுத்துக்கொள்ளுங்கள்,    சித்திரை 21 ம் தேதியே அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்டது .  சரி, இது எப்படிக் கணக்கிடப்படுகிறது. இதற்கு ஏன் அக்னி நட்சத்திரம் என்ற பெயர் வந்தது?  அதைப் பார்ப்பதற்கு முன்னாள் சற்று வானியல், இதெல்லாம் எங்களுக்குத்