Skip to main content

Posts

Showing posts from July, 2020

உவணச் சேவல் நியமம்

உலகில் நீண்ட நெடு வரலாற்றை உடைய தொல் நகரங்களில் ஒன்று மதுரை. கிட்டத்தட்ட 2500 ஆண்டுகள் பழமையான நகர் இது. நகரின் எல்லைகள் அவ்வப்போது விரிந்தும் சுருங்கியும் வந்திருந்தாலும், அதன் மையப்பகுதி அதிகமாக மாறவில்லை என்பதே ஆராய்ச்சியாளர்களின் முடிவு. இப்படிப்பட்ட பழம்பெருமை வாய்ந்த நகரில் இரு ஆலயங்கள் தனிச்சிறப்புடையனவாகத் திகழ்ந்தன. அதில் 'மழுவாள் நெடியோன்' என்று மதுரைக் காஞ்சி போற்றும் ஆலவாய் அண்ணலின் ஆலயத்தைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம். இப்போது அங்கே திருமாலின் கோவில் எங்கே இருந்தது என்பதை ஆராய்வோம். பண்டைக்காலத்தில் மதுரையின் கோட்டை தற்போது ஆவணி மூல வீதி என்று அழைக்கப்படும் வீதியைச் சுற்றியே இருந்தது. மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்  பூவொடு புரையும் சீருர், பூவின்  இதழகத் தனைய தெருவம்;  இதழகத்து  அரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில் என்ற பரிபாடலின் வரிகள் பூவின் இதழ்களைப் போல வட்டமான தெருக்கள் இருந்தனவென்றும் நடுநாயகமாக ஆலவாய் அண்ணல் கோவில் இருந்தது என்றும் விளக்குகிறது. இந்தக் கோட்டையின் வெளிப்புறத்தில், நகரின் தென்மேற்கு மூலையில் இருந்தையூர் என்னும் புறநகர்ப் பகுதி

சிலப்பதிகாரத்தில் ஆலவாய் அண்ணலும் அம்மையும்

(சிலப்பதிகாரம் நிகழ்ந்த காலத்திலேயே ஆலவாய் அண்ணலாம் சொக்கநாதரின் கோவில் பெரிதாக விளங்கியது என்ற குறிப்பு இருந்ததைச் சுட்டி ட்விட்டரில் எழுதியிருந்தேன். அப்போது மீனாட்சி அம்மனைப் பற்றிய குறிப்பு இல்லையா என்ற கேள்வி எழுகிறது அல்லவா. எனவே அதையும் சேர்த்து இங்கே எழுதியிருக்கிறேன்) மதுரை நகருக்கு ஆலவாய் அண்ணலின் கோவிலே பிரதானம் என்பதை சிலப்பதிகாரம் இரண்டு இடங்களில் சுட்டுகின்றது. கோவலனும் கண்ணகியும் மதுரை எல்லையை அடைந்து வைகையைக் கடக்கும் முன்பே கோவிலில் இருந்து எழும் ஓசைகள் அவர்களுக்குக் கேட்கத் தொடங்கிவிடுகின்றன. இது புறஞ்சேரி இறுத்த காதையில் வருகிறது. “ அருந்தெறற் கடவுள் அகன்பெருங் கோயிலும் பெரும்பெயர் மன்னவன் பேரிசைக் கோயிலும் பால்கெழு சிறப்பிற் பல்லியஞ் சிறந்த காலைமுரசக் கனைகுரல் ஓதையும் நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும்; மாதவர் ஓதி மலிந்த ஓதையும் ” அரும் தெறற்கடவுள்,அதாவது அரிதான அழித்தல் தொழிலில் வல்ல சிவபெருமானின் அகன்ற பெருங் கோவில் என்று குறிப்பிடுகிறார் இளங்கோவடிகள்.இப்போது போலவே பெரும் கோவிலாக அது இருந்திருக்கிறது. அங்கே நான்கு மறைகளையும் அந்தணர் ஓதுகின்றனர். முனிவர்க