திருமலை மன்னருக்குப் பிறகு மதுரை பல ஆட்சி மாற்றங்களையும் எண்ணற்ற சிக்கல்களையும் குழப்பங்களையும் கண்டது. ஆனாலும் அவர் ஏற்படுத்திய கட்டளைப் படி திருவிழாக்களும் அதில் உள்ள நடைமுறைகளும் இன்றளவும் தொடர்ந்து வருகின்றன. திருவிழாக்களை ஏற்படுத்தியதோடு மற்றும் நின்றுவிடவில்லை அவர், மீனாட்சி கோவிலிலும், அழகர் கோவிலிலும், திருப்பரங்குன்றத்திலும் எண்ணற்ற திருப்பணிகள் செய்தார் அவர். சிதிலமடைந்த பகுதிகளை எல்லாம் செப்பனிட்டார். சாதாரணமாக சுண்ணம் சேர்த்து அதனால் செய்த கலவைகளை வைத்து செப்பனிடுவதற்குப் பதிலாக, கடற்சங்குகளை சுட்டு, அரைத்து அதனால் செய்யப்பட்ட விசேஷமான கலவைகளைப் பயன்படுத்தினார். ஒரு ஆட்சியாளராக திருமலை நாயக்கர் மீது எண்ணற்ற விமரிசனங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு பக்தராக அவர் அரும்பணி ஆற்றியிருக்கிறார். ஹிந்து மதத்தை மட்டும் அல்லாமல், மற்ற மதங்களையும் அரவணைத்தே சென்றிருக்கிறார். சைவ வைணவ ஒற்றுமைக்கு அடிகோலி, எல்லா பிரிவைச் சேர்ந்த தெய்வங்களையும் சித்திரைத் திருவிழாவில் பங்குபெறச் செய்ததன் மூலம், சில்லறை மதச்சண்டைகளை ஒழித்துக்கட்டி மக்களிடையே ஒற்றுமையுணர்வை ஓங்கச் செய்தார். தானே அதற்கு முன்னு