Skip to main content

Posts

Showing posts from April, 2016

சித்திரைத் திருவிழா - நிறைவு

திருமலை மன்னருக்குப் பிறகு மதுரை பல ஆட்சி மாற்றங்களையும் எண்ணற்ற சிக்கல்களையும் குழப்பங்களையும் கண்டது. ஆனாலும் அவர் ஏற்படுத்திய கட்டளைப் படி திருவிழாக்களும் அதில் உள்ள நடைமுறைகளும் இன்றளவும் தொடர்ந்து வருகின்றன. திருவிழாக்களை ஏற்படுத்தியதோடு மற்றும் நின்றுவிடவில்லை அவர், மீனாட்சி கோவிலிலும், அழகர் கோவிலிலும், திருப்பரங்குன்றத்திலும் எண்ணற்ற திருப்பணிகள் செய்தார் அவர். சிதிலமடைந்த பகுதிகளை எல்லாம் செப்பனிட்டார்.  சாதாரணமாக சுண்ணம் சேர்த்து அதனால் செய்த கலவைகளை வைத்து செப்பனிடுவதற்குப் பதிலாக, கடற்சங்குகளை சுட்டு, அரைத்து அதனால் செய்யப்பட்ட விசேஷமான கலவைகளைப் பயன்படுத்தினார். ஒரு ஆட்சியாளராக திருமலை நாயக்கர் மீது எண்ணற்ற விமரிசனங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு பக்தராக அவர் அரும்பணி ஆற்றியிருக்கிறார். ஹிந்து மதத்தை மட்டும் அல்லாமல், மற்ற மதங்களையும் அரவணைத்தே சென்றிருக்கிறார். சைவ வைணவ ஒற்றுமைக்கு அடிகோலி, எல்லா பிரிவைச் சேர்ந்த தெய்வங்களையும் சித்திரைத் திருவிழாவில் பங்குபெறச் செய்ததன் மூலம், சில்லறை மதச்சண்டைகளை ஒழித்துக்கட்டி மக்களிடையே ஒற்றுமையுணர்வை ஓங்கச் செய்தார். தானே அதற்கு முன்னு

சித்திரைத் திருவிழா - 11

மதுரை நகரின் தெற்கில் சுமார் 8 கிமீ தொலைவில் இருக்கும் திருப்பரங்குன்றமும் பழமைவாய்ந்த நகரம். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடு என்ற பெருமை பெற்றது. பரிபாடலிலும், திருமுருகாற்றுப்படையினிலும், மதுரைக் காஞ்சியிலும் இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் உண்டு. தமிழ்ச்சங்க வரிசையில் கடைச்சங்கம் இங்குதான் இருந்தது என்றும் சொல்வது உண்டு. இப்படி பல சிறப்புகள் வாய்ந்த இக்கோவில் குடைவரைக் கோவில் வகையைச் சார்ந்தது. இந்தக் கோவில் இடைக்காலப் பாண்டியர்களால் எழுப்பப் பட்டது.  கருவறையில் விநாயகர், சிவன், துர்கை, முருகன், பெருமாள் என்று ஐந்து தெய்வங்களைக் கொண்ட கோவில் இது. மாசி வீதிகளில் ஆடி வரும் தேர்  திருமலை மன்னர் இங்கும் 'சில பல' வேலைகளைச் செய்து வைத்திருந்தார். அதைப் பற்றி இன்னொரு சமயம் பார்க்கலாம். சித்திரைத் திருவிழாவை பெரும் திருவிழாவாக மாற்றிய பிறகு திருப்பரங்குன்ற முருகனையும்  அதோடு இணைக்கத் திட்டமிட்டார். திருமணம் நடைபெறுகிற வேளையில் மீனாட்சி அம்மானை சொக்கநாதருக்கு தாரை வார்த்துத் தரவேண்டும் அல்லவா. அழகரை ஒரு கதை சொல்லி அக்கரையிலேயே நிற்கவைத்தாகி விட்டது. எனவே

சித்திரைத் திருவிழா - 10

மாசித் தேரோட்டத்தை அழகர் ஆற்றில் இறங்கும் சித்ரா பௌர்ணமி விழாவோடு சேர்க்கத் திட்டமிட்டார் திருமலை நாயக்கர்., தேரோட்டத்தோடு பங்குனி மாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த திருக்கல்யாண வைபவத்தையும், அதோடு பட்டாபிஷேகம், திக்விஜயம் ஆகிய நிகழ்ச்சிகளையும் சேர்த்துவிட்டார். அதன்படி, பங்குனி உத்திரத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த திருக்கல்யாணம் சித்திரை மாதம் உத்திரத்திலும் அதற்கு அடுத்த நாள் தேரோட்டமும் அதற்கு அடுத்து சித்திரை பௌர்ணமியன்று அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் நடந்தது. பட்டாபிஷேகமும் திக்விஜயமும் திருக்கல்யாண வைபவத்திற்கு முந்தைய நாட்கள் நடந்தன. இப்படி மூன்று விழாக்களை ஒருங்கிணைத்து பெருந்திருவிழாவாக மாற்றிய நாயக்கர், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை தொலைவிலுள்ள தேனூரிலிருந்து மதுரை நகரில், வைகைக்கு அக்கரையில் உள்ள வண்டியூருக்கு மாற்றி அங்கே தேனூர் மண்டபம் என்ற மண்டபத்தையும் அந்த விழா நடப்பதற்காகக் கட்டிக்கொடுத்தார். இதனால் சித்திரைத் திருவிழாவிற்கு பெருந்திரளான மக்கள் கூடினார்கள். தேரோட்டமும் சிறப்பாக நடந்து முடிந்தது.  சுவாமி அம்மன் வீதியுலா மாசி வீதிகளில் நடைபெற்றது. 'அதெல்லாஞ்சரி, ஏற்

சித்திரைத் திருவிழா - 9

தாம் செய்த வலுவான தேர்களை இழுக்க போதுமான ஆட்கள் கிடைக்கவில்லையே என்ற யோசனையில் ஆழ்ந்திருக்கும் திருமலை நாயக்கரை அப்படியே விட்டுவிட்டு, மதுரைக்கு வட கிழக்கில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் அழகர் மலைக்குச் செல்வோம். திருமாலிருஞ்சோலை, அழகர்மலை என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த வைணவத்தலம் புராதனமான வரலாற்றை உடையது. இந்தக் கோவிலில் உறையும் சுந்தரராஜப் பெருமாள் ஆழ்வார்களால்  மங்களாசாசனம் செய்யப்பட்டவர். 'சுந்தரத் தோளுடையான்' என்று ஆண்டாள் இவரை அழைக்கிறார். பரிபாடலில் இந்தத் தலத்தைப் பற்றிய குறிப்புகள் உண்டு. சிலப்பதிகாரத்தில் காடு காண் காதையில் மதுரைக்குச் செல்லும் மூன்று வழிகளில் ஒன்றாக திருமால் குன்ற வழியை மாங்காட்டு மறையவன் உரைக்கின்றான். அங்கேயுள்ள சிலம்பாற்றைப் பற்றியும் கூறுகின்றான். இப்படிப் பல சிறப்புகள் கொண்ட அழகர் கோவில், சிறு தெய்வம், பெரும் தெய்வம் என்று சிலர் இப்போது அடிக்கும் ஜல்லிக்கு எல்லாம் அப்பாற்பட்டது. இந்த ஊரைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கெல்லாம் அழகர்தான் குல தெய்வம். அவர்களால் கள்ளழகர் என்று அன்போடு அழைப்படுபவர் இவர். அதே சமயம், கிராம தேவதை

சித்திரைத் திருவிழா - 8

இப்போது நம் தொடரின் நாயகனான(!!) திருமலை நாயக்கருக்கு வருவோம். பொயு 1627ம் ஆண்டு வாக்கில் திருமலை நாயக்கர் மன்னராகப் பொறுப்பேற்றார். நாயக்கர்கள் வரிசையில் ஏழாவது மன்னர் அவர். அவருக்கு முன்பு ஆண்ட முத்து வீரப்பர் தலைநகரைத் திருச்சிக்கு மாற்றியதால், அவரும் திருச்சியிலிருந்தே ஆட்சியைத் தொடர்ந்தார். திருமலை நாயக்கர் ஆட்சிக்கு வந்த புதிதில் தென்னாட்டில் ஏகக்குழப்பங்கள். விஜயநகரம் தன் வலிமையை இழந்து பாமினி சுல்தான்களோடு போராடிக்கொண்டிருந்தது. மைசூர் உடையார்கள் தனியரசை உருவாக்கியிருந்தனர். தஞ்சாவூர் நாயக்கர்கள் மதுரைக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். இராமநாதபுரத்தில் சேதுபதிகள் நாயக்கர் ஆட்சியிலிருந்து விடுபட முயற்சி செய்துகொண்டிருந்தனர். ஆட்சியின் முதல் ஏழாண்டுகள் இவற்றையெல்லாம் ஓரளவு சமாளித்துக்கொண்டிருந்த திருமலை நாயக்கர், 1634ல் தலைநகரை மீண்டும் மதுரைக்கு மாற்றினார். இந்தத் தலைநகர் மாற்றத்திற்குச் சரியான காரணம் தெரியவரவில்லை. இது தொடர்பாக வழங்கப்படும் கதை ஒன்று இப்படிச் சொல்கிறது. திருமலை மன்னர் மண்டைச்சளி (catarrh) நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். ஒருநாள் அவர் கனவில் தோன்றிய சொக்கநா

சித்திரைத் திருவிழா - 7

கம்பண்ணர் மதுரையை சுல்தான்களிடமிருந்து மீட்டதும், சீர்கெட்டுப் போயிருந்த நிர்வாகத்தை செம்மைப் படுத்த முயன்றார். மதுரை முறைப்படி விஜயநகரப் பேரரசின் ஒரு அங்கமாக ஆக்கப்பட்டது. பாழடைந்து கிடந்த மீனாட்சி அம்மன் கோவிலும் சீரமைக்கப்பட்டது. கம்பண்ணர் ஆட்சி அமைத்ததைக் கேட்ட ஸ்தானீகர்களும் நாடு திரும்பினர். கோவிலில் பூஜைகள் வழக்கம்போல் துவக்கப்பட்டன. கம்பண்ணருக்குப் பிறகு விஜயநகரத்தின் பிரதிநிதியாக இரண்டாம் ஹரிஹரரின் மகன் பொறுப்பேற்றார். அதன்பின் 'உடையார்கள்' என்று அழைக்கப்பட்ட விஜயநகரின் பிரதிநிதிகள் மதுரையை ஆண்டனர். பதினைந்தாம் நூற்றாண்டின் மத்தியில் விஜயநகரத்தில் ஏற்பட்ட குழப்பங்களின் காரணமாக அந்த அரசின் பிடி தளர்ந்தது. சங்கம வம்சத்தை அடுத்து சாளுவ வம்சமும் அதன்பின் துளு வம்சமும் விஜயநகரத்தை ஆண்டன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு மதுரையை வாணாதிராயர்கள் பிடித்துக்கொண்டனர். அதன் பின் மதுரையின் ஆட்சியுரிமையில் பெருங்குழப்பம் நிலவியது. ஆளுக்காள் உரிமை கோரி தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டனர். ஏழாம் திருநாளில்  -   நந்திகேஸ்வர வாகனத்தில் சுவாமியும் யாளி வாகனத்தில் அம்மனும

சித்திரைத் திருவிழா - 6

மதுரை  சுல்தான்கள் வரிசையை துக்ளக்கின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட ஆசன் கான் துவக்கி வைத்தான் என்று பார்த்தோம். இதைக் கேள்விப்பட்ட முகமது பின் துக்ளக் அவனைக் கொல்ல ஒரு படையை அனுப்பி வைத்தான். ஆனால், அந்தப் படைவீரர்களுக்கு லஞ்சம் கொடுத்துத் தன் பக்கம் திருப்பிக்கொண்டான் ஆசன்கான். இதைக் கேள்விப்பட்டு கடும்கோபம் அடைந்த துக்ளக் ஆசன்கானின் மகனை சித்ரவதை செய்து, இரு துண்டுகளாக வெட்டிக் கொலை செய்தான். துக்ளக்கின் அவையில் இருந்தவரும் அக்காலத்திய பயணக்குறிப்புகளை எழுதியவருமான இபின் பதூதா, ஆசன் கானின் மகளை மணம் புரிந்திருந்தார். மைத்துனனுக்கு நேர்ந்த கதி தமக்கும் நேரலாம் என்று அஞ்சி அவர் நாட்டை விட்டுக்கிளம்பினார்.  ஆனால் இலங்கைக்கு அருகில், அவர் பயணம் செய்த கப்பல் புயலில் சிக்கிக்கொண்டது. தப்பிப் பிழைத்த அவர் மதுரை வந்து சேர்ந்தார். மதுரையில் அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அங்கு ஆசன் கானின் இன்னொரு மகளைத் திருமணம் செய்த கியாசுதீன் கான் ஆட்சி செய்துகொண்டிருந்தார் (1340). தன் 'சகலையை' மரியாதையுடன் வரவேற்று சில காலம் அங்கேயே தங்கச்செய்தார் கியாசுதீன். அங்கு, தாம் பார்த்தவைகளைக் குறிப்பு

சித்திரைத் திருவிழா - 5

அடுத்தடுத்த இரண்டு படையெடுப்புகளால் நிலைகுலைந்த மதுரை நகரையும் கோவிலையும், பராக்கிரம பாண்டியர் சீரமைக்க முயன்றுகொண்டிருந்தார் என்று பார்த்தோம். ஆனால் அவரை விதி விடவில்லை. டெல்லியில் கில்ஜிகளின் ஆட்சி முடிவடைந்து துக்ளக் வம்சம் ஆட்சியைப் பிடித்தது. இந்த  இடைப்பட்ட காலத்தில்  வாரங்கல்லின் காகதீயர்களும் துவாரசமுத்திரத்தில் ஹொய்சாளர்களும் தங்கள் நாட்டை மீண்டும் ஒரு கட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர். காகதீய அரசனான பிரதாபருத்திரன்  ஒரு படி மேலே போய் டெல்லிக்கு கப்பம் கட்ட மறுத்துவிட்டான்.  இவர்களை அடக்குவதற்காக, டெல்லி சுல்தானான கியாசுதீன் துக்ளக் தன்னுடைய மூத்த மகனும் இளவரசனுமான உலூக் கானை தென்னிந்தியாவுக்கு ஒரு படையோடு அனுப்பிவைத்தான். இந்த உலூக் கான் தான் பின்னாளில் டெல்லி அரியணை ஏறிய 'பிரசித்தி' பெற்ற முகம்மது பின் துக்ளக். அப்பாவியாகவும் காமெடியனாகவும் சித்தரிக்கப்படும் இவன் உண்மையில் மிகக் கொடூரமானவன். 1323ல் கிளம்பிய உலூக் கான் வாரங்கல்லையும் துவாரசமுத்திரத்தையும் வென்று சூறையாடி தமிழகத்திற்குள் நுழைந்தான். திருவரங்கத்தில் அந்த ஆண்டு பங்குனித் திருவிழாவில் புகுந்து இவனது பட

சித்திரைத் திருவிழா - 4

ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் காலத்திலும் அதற்குப் பின் வந்த மாறவர்மன் குலசேகரன் காலத்திலும் பாண்டிய நாடு பெரும் செல்வத்தை ஈட்டியது என்று பார்த்தோம். இந்த செல்வ வளத்தைப் பற்றி குலசேகரன் காலத்தில் பாண்டிய நாட்டிற்கு வந்த மார்க்கோ போலோ தன்னுடைய பயணக்குறிப்புகளில் குறிப்பிட்டிருக்கிறார். பொன்னும் மணியும் முத்தும் குவியல் குவியலாக அரண்மனையில் கொட்டிக்கிடந்தன என்று எழுதியிருக்கும் அவர், புதிய அரசர் பட்டமேற்றவுடன், முந்தைய அரசர் ஈட்டிய செல்வத்தை பயன்படுத்தாமல், வர்த்தகத்தின் மூலமும் போர்களின் மூலமும் புதிதாக செல்வத்தை ஈட்டி கஜானாவில் சேர்த்தனர் என்று குறித்திருக்கிறார். சித்திரைத் திருநாள் நான்காம் நாள் - தங்கப்பல்லக்கில் சுவாமியும் அம்மனும் இப்போது வரலாற்றைத் தொடர்வோம். குலசேகர பாண்டியர் தமது அடுத்த வாரிசாக ஒருவரை நியமிக்கும் நேரம் வந்துவிட்டதை உணர்ந்தார். அவருக்கு பட்டமகிஷியின் மூலம் பிறந்த சுந்தர பாண்டியர் மதுரையிலும் ஆசைநாயகியின் மூலம் பிறந்த வீரபாண்டியர் கொற்கையிலும் பாண்டிய குல வழக்கப்படி நிர்வாகத்தைக் கவனித்துக்கொண்டிருந்தனர். முறைப்படி பட்டத்திற்கு வரவேண்டிய சுந்தர பாண்டிய

சித்திரைத் திருவிழா - 3

சோழர்களின் சிற்றரசர்களாக இருக்க வேண்டிய நிலையிலும் கோவிலுக்கு செய்ய வேண்டிய திருப்பணிகளை பாண்டியர்கள் நிறுத்தவில்லை. கோவிலின் முன்மண்டபங்களையும், உள் பிரகாரங்களிலும் தெய்வங்களின் சன்னதிகளின் மேலும் 'காடக கோபுரம்' போன்ற சிறு கோபுரங்களையும் பாண்டிய மன்னர்கள்  கட்டினர். கோவிலின் நிர்வாகத்தையும் செம்மைப்படுத்தினர். ஏழு ஸ்தானீகர்கள் கோவில் நிர்வாக அதிகாரிகளாகச் செயல்பட்டனர். அவர்கள் 'மகர முத்திரை' ,'மகரக் கொடி', 'பொன் எழுத்தாணி', வ்ருஷப முத்திரை',  'நாக முத்திரை' ஆகிய இலச்சினைகளைப் பயன்படுத்தியதாக 'மதுரை ஸ்தானீகர் வரலாறு' என்ற நூல் கூறுகிறது.  கோவிலைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கொண்ட குறிப்பேடாக 'ஶ்ரீதளம்' என்ற நூல் உருவாகப்பட்டது. இறைவனுக்கு இசைந்த தமிழ்பாமாலைகளான தேவாரம், திருவாசகம், திருப்பல்லாண்டு, திருவிசைப்பா ஆகியவைகளை இசைக்க இரு ஓதுவார்கள் நியமிக்கப்பட்டனர். பொயு 1190 வாக்கில் அரியணை ஏறிய முதலாம் ஜடாவர்மன் குலசேகர பாண்டியர்  இத் திருப்பணிகளை மேலும் செம்மைப்படுத்த எண்ணி, ஆடி வீதியைச் சுற்றி ஒரு மதிலும், சொக்கநாதர

சித்திரைத் திருவிழா - 2

மதுரை மீனாட்சியம்மையின் கோவில்  நம் நாட்டிலுள்ள புராதனமான கோவில்களில் ஒன்று. சைவர்களின் தலையாய கோவில்களில் ஒன்றாகவும் சாக்தர்களின் சக்தி பீடங்களில் ஒன்றாகவும் கருதப்படுவது இந்தத் தலம். லலிதா திரிபுரசுந்தரியின் மந்திரியான ராஜமாதங்கியின் அம்சமாக மீனாட்சியம்மை போற்றப்படுகிறாள்.   இப்படிப் பல பெருமைகள் வாய்ந்த, கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகள் பழைமையான இந்தக் கோவில் ஆதியில் பாண்டியர்களால் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. தொடர்ந்த கடற்கோள்களால் தங்கள் தலைநகரங்களை மாற்றிக்கொண்டு வந்த பாண்டியர்கள், ஒருவழியாக மதுரையில் தங்கள் தலைநகரை அமைத்துக்கொண்டு, வைகையின் தென்கரையில் இந்தக் கோவிலைக் கட்டினார். முதலில் சிறியதொரு கோவிலாகத்தான் இது அமைக்கப்பட்டது. சுந்தரேஸ்வரர் சன்னதி, மீனாட்சி சன்னதி, மற்றும் ஒரு சுற்றுப் பிரகாரத்தைக் கொண்டு அமைக்கப்பட்டது இந்தக் கோவில். கோவிலைச் சுற்றி தாமரை வடிவில் மதுரை நகர் அமைக்கப்பட்டதாகக் குறிப்புகள் உண்டு. சங்க காலப் பாண்டியர் காலத்திற்குப் பிறகு மதுரை நகர் களப்பிரர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. பாண்டியன் கடுங்கோன் களப்பிரர்களிடமிருந்து பாண்டிய நாட்டை மீட்டு இடைக்காலப் ப

சித்திரைத் திருவிழா - 1

இதோ கொடியேற்றத்துடன் இன்னுமொரு சித்திரைப் பெருவிழா துவங்கி விட்டது. அடுத்த பதினைந்து நாட்களுக்கு மதுரை களைகட்டிவிடும். மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சியம்மையின் திருமணத்தை மீண்டும் ஒரு தடவை காணப்போகிறோம் என்ற ஆனந்தத்திலும்,  'ஆத்தைக் கண்டேனா அளகரைச் சேவிச்சேனா' என்று கிடப்பதை விட்டுவிட்டு திருமாலிருஞ்சோலையிலிருந்து வரும் கள்ளழகரைச் சேவிக்கப் போகிறோம் என்ற உந்துதலிலும் அக்கம் பக்கத்து கிராம மக்கள் அனைவரும் இந்நாட்களில் ஒன்று கூடப்போகிறார்கள். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குழந்தைகளும் பெரியோர்களும் மதுரை நகரை நிறைக்கப்போகிறார்கள். மதுரை நகரைப் பொறுத்தவரை திருவிழாக்களுக்குப் பஞ்சமில்லை, குறிப்பாக மீனாட்சி அம்மன் கோவிலில் மாதந்தோறும் ஏதாவது ஒரு திருவிழா நடந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படி இருக்க சித்திரைத் திருவிழாவிற்கு என்ன சிறப்பு?  தமிழ்நாட்டுக்கோவில்களில் நடைபெறும் பெரிய திருவிழாக்களில் ஒன்று என்பதைத் தவிர, இந்த சித்திரைத் திருவிழாவிற்கு இன்னுமொரு சிறப்பு உண்டு. சைவ - வைணவ கோவில்களின் திருவிழாக்கள் ஒன்றாக, ஒன்றிணைந்து கொண்டாடப்படும் ஒரே விழா இதுவாகத்தான் இர