Skip to main content

Posts

Showing posts from July, 2019

தமிழகத்தின் மீது டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு - 2

சென்ற பகுதியில் மாலிக்கபூரின் படையெடுப்பைப் பற்றிப் பார்த்தோமல்லவா. அந்தப் படையெடுப்பின்  விவரத்தை இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களான அமீர் குஸ்ரூ, வசாப், பார்னி போன்றவர்கள் தெளிவாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். பலர் சொல்வது போல், ஶ்ரீரங்கத்தில் மாலிக்கபூர் நிகழ்த்திய சேதங்கள் பற்றிய தெளிவான விவரங்கள் இல்லை. சமயபுரம் வரை வந்த மாலிக்கபூர் ஶ்ரீரங்கத்தை விட்டு வைத்திருக்க முடியாது என்றாலும், "மற்ற கோவில்களையும் கொள்ளையடித்தான்" என்று அமீர் குஸ்ரூ ஒரே வரியில் முடிப்பதால், கோவிலில் பெரும் கொள்ளை நடந்திருக்கவேண்டும் என்று மட்டுமே நாம் புரிந்துகொள்ளலாம். இதே போலத்தான் மதுரையிலும். செல்வங்கள் கொள்ளை போயினவே தவிர கோவிலுக்கு அதிகம் சேதமில்லை என்றே நாம் கருதலாம். மாலிக்கபூர் சிதம்பரம் கோவிலைச் சேதப்படுத்திய விவரங்கள் மட்டுமே விரிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவன் ராமேஸ்வரம் வரை சென்றான் என்பதற்குக் கூட தகுந்த ஆதாரங்கள் இல்லை. இருப்பினும் தமிழகத்தில் மாலிக்கபூரின் படையெடுப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பாண்டியப் பேரரசை வலுவிழக்க வைத்துவிட்டது. மாலிக்கபூர் அப்பால் சென்றவுடன் வீரபாண்டியன்

தமிழகத்தின் மீது டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு - 1

(சுருக்கமான) முன்னுரை தமிழகத்தின் மீது நடைபெற்ற டெல்லி சுல்தான்களின் படையெடுப்பைப் பற்றி பல்வேறு விதமான கதைகள் / தகவல்கள் உலவுகின்றன. நன்கு கற்றறிந்த நண்பர்களே கூட இவற்றைப் பற்றி எழுதும்போது பல தவறுகளைச் செய்வதைக் காண முடிந்தது. குறிப்பாக 'எல்லாக் கேசையும்' மாலிக்கபூர் மீதே எழுதிவிடுகிறார்கள். கொஞ்ச நாள் முன்பு நான் படித்த கட்டுரை ஒன்றில் வரலாற்றைப் பற்றி நன்கு அறிந்த நண்பர் ஒருவரே பல பிழைகளைச் செய்திருந்தார். இதற்கான காரணமாக நான் கருதுவது, ஏதாவது ஒரு ஆதாரக் கட்டுரையை எடுத்துக்கொண்டு கால வித்தியாசங்களைச் சரிபார்க்காமல், மற்ற தரவுகளை ஒப்புநோக்காமல் எழுதுவதே ஆகும்.  முடிந்த மட்டிலும் அதற்கான ஆய்வைச் செய்து, இந்த விஷயத்தில்  ஓரளவுக்கு தெளிவான பார்வையை அளிக்க முயல்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். இந்தப் படையெடுப்புகளைப் பற்றி நான் இந்த ப்ளாக்கில் எழுதிய 'சித்திரைத் திருவிழா' கட்டுரைத் தொடரில் குறிப்பிட்டிருக்கிறேன். அந்தத் தகவல்களை கொஞ்சம் விரிவாக இப்போது பார்க்கலாம். முதல் படையெடுப்பு தமிழ்நாட்டின் மீது பொயு 14ம் நூற்றாண்டில் மும்முறை டெல்லி சுல்தான்களின் படை