Wednesday, 9 October 2024

திருமங்கை ஆழ்வாரும் நாகப்பட்டினத்தின் விஹாரமும்


சமணர் கழுவேற்றத்தைப் போலவே திருமங்கை ஆழ்வாரைப் பற்றிய அவதூறுகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. அவர் நாகப்பட்டினம் புத்த விஹாரத்தைக் கொள்ளையடித்தார் என்றும் அங்குள்ள புத்தர் சிலையை உருக்கி ஶ்ரீரங்கத்தில் திருப்பணி செய்தார் என்றும் அதனால் அவர் ஏதோ தகாத செயலைச் செய்துவிட்டார் என்றும் தொடர்ந்து ஒரு கூட்டம் சொல்லிவருகிறது. எப்படி சமணர் கழுவேற்றம் பெரியபுராணத்தில் சொல்லப்படுகிறதோ அதேபோல இந்தப் புராணமும் ஶ்ரீவைஷ்ணவர்களுடைய குருபரம்பரைச் சரித்திரத்தில் வருகிறது. ஆனால் இந்த இரண்டையும் அவதூறாகச் சொல்பவர்கள் புராணங்களையெல்லாம் குப்பை என்று சொல்பவர்கள். அவர்களுடைய அஜெண்டாவுக்குத் தேவையானதை எடுத்துக் கொள்ளும் அவர்கள், புராணங்களில் சொல்லப்படுகின்ற எல்லாவற்றையும் ஒப்புக்கொள்வார்களா என்று கேட்டால் பதில் வராது. சரி, இந்தச் செய்தியின் உண்மையை வரலாற்று ரீதியாகவும் புராண ரீதியாகவும் ஆராய்வோம். 

நாகப்பட்டினத்தின் பௌத்த விஹாரம் ஒன்று பண்டைக்காலத்தில் இருந்ததற்கு வரலாற்று ஆதாரம் உண்டா என்று பார்த்தால், அதற்கான ஆதாரமே இல்லை. சீன யாத்திரிகரான யுவான் சுவாங் தமிழகத்திற்கு நரசிம்ம பல்லவனின் காலத்தில் வந்தபோது, நாகப்பட்டினத்தைக் குறிப்பிடுகிறார். ஆனால் அங்கே புத்த விஹாரம் இருந்ததாகக் குறிப்பிடவே இல்லை. இத்தனைக்கும் அவர் இந்தியாவில் உள்ள பௌத்தத் தலங்களை விடாமல் குறிப்பிட்டிருக்கிறார். 

அடுத்து பல்லவ மன்னனான ராஜசிம்மன், சீன அரசர்களோடு நல்லுறவு கொண்டதன் விளைவாக தமிழகத்தில் ஒரு பௌத்த விஹாரம் ஒன்றைக் கட்டினான் என்று சீன நூல்கள் குறிப்பிடுகின்றன. கோ-ஹோ-சே என்று பொறித்த கல்வெட்டு ஒன்றை சீன அரசர் அனுப்பியதாகவும் அது அந்த விஹாரத்தின் முன்பு வைக்கப்பட்டதாகவும் அந்த நூல்கள் குறிக்கின்றன. இப்படி ஒரு பௌத்த கோவிலை ராஜசிம்மன் கட்டியதாக பல்லவ ஆவணங்கள் தெரிவிக்கவில்லை. இருப்பினும், இந்த புத்த விஹாரம் எந்த இடத்தில் கட்டப்பட்டது என்பதற்கான ஆதாரம் எங்கேயும் இல்லை. அது பல்லவர்களின் துறைமுகமான மாமல்லபுரத்தில் கூட கட்டப்பட்டிருக்கலாம். 

பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் காலத்தைச் சேர்ந்தவர் திருமங்கை ஆழ்வார். நீலன் என்ற இயற்பெயர் கொண்டவர். ஆலி நாட்டை ஆண்டவர். சோழர்களுக்கு உதவியாக பல போர்களைச் செய்தவர். அவருடைய பாடல்களின் அகச்சான்றுகளிலும் சரி, சோழ, பல்லவ கல்வெட்டுகளிலும் சரி நாகப்பட்டினத்தில் புத்த விஹாரம் ஒன்று இருந்ததாகவோ அல்லது அதைத் திருமங்கை மன்னர் கொள்ளையடித்ததாகவோ ஆதாரமே இல்லை. எந்த விதமான வரலாற்று ஆதாரமும் இல்லாத ஒன்றைத்தான் பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக்கொள்வோர் மீண்டும் மீண்டும் அவதூறாகச் சொல்கிறார்கள். 

சரி, குருபரம்பரைச் சரித்திரத்தின் படி பார்ப்போம். திருமங்கை மன்னர், குமுதவல்லி என்ற பரம பக்தரை மணந்துகொள்கிறார். அதன்காரணமாக திருமாலின் பக்தராகி, பல கோவில்களுக்குத் திருப்பணி செய்ய முனைகிறார். தினமும் ஆயிரத்தெட்டு வைணவர்களுக்கு உணவளிக்கவேண்டும் என்ற குமுதவல்லி அம்மையாரின் நிபந்தனையை ஏற்று, தன் பணத்தை எல்லாம் செலவழித்து அந்தத் திருப்பணியைச் செய்தார். தன்னிடம் இருந்த பணம் அனைத்தும் செலவழிந்து போகவே, கொள்ளைத் தொழிலில் இறங்கினார். அதிலிருந்து கிடைத்த பணத்தைக் கொண்டு கோவில் திருப்பணிகளைச் செய்தார், அதில் ஒன்றுதான் இந்த 'நாகப்பட்டினக் கொள்ளை'. ஒரு கட்டத்தில் திருமால் அவரைத் திருத்த மனம் உவந்து தம்பதியரைப் போல வருகிறார். அவரிடமே கொள்ளையடிக்க முனைந்த திருமங்கை ஆழ்வாரை அழைத்து அவருக்கு அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொள்கிறார். 

அதன்பின் திருமங்கை ஆழ்வார் பெருமாளின் புகழைப் பாட ஆரம்பிக்கிறார். தான் செய்த செயல்களை அவரே இப்படிக் கூறிக்கொள்கிறார். 

கொன்றேன் பல்லுயிரைக் குறிக்கோள் ஒன்றிலாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக உரைத்தறியேன்
குன்றேய் மேகமதிர் குளிர்மாவேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே

பல உயிர்களைக் காரணமில்லாமல் கொன்றேன். இனிய மொழிகளைப் பேசவில்லை. வேங்கடவனே என்னை ஆட்கொள் என்கிறார் திருமங்கை ஆழ்வார். அப்படிக் கடந்த காலத்தில் தான் செய்த தவறுகளை நினைத்து வருந்தி பெருமாளிடம் சரணடைந்தவர் திருமங்கை மன்னர். ஆகவே அவர் நாகப்பட்டின விஹாரத்தைக் கொள்ளையடித்தார் என்று குருபரம்பரைச் சரித்திரத்தின் அடிப்படையில் எடுத்துக்கொண்டாலும் கூட, அது அவர் கள்வராக இருந்தபோது நடந்த நிகழ்வே அன்றி, அவர் திருமாலின் பரம பாகவதராக ஆவதற்கு முன்பு என்பது தெளிவாகிறது. 

எனவே எப்படி எடுத்துக்கொண்டாலும், பக்தர்கள் ஏதோ கொள்ளையடிப்பார்கள் என்பது போலச் சித்தரிப்பது அபத்தமான செயல். 


சரி, அப்போது நாகப்பட்டினத்தில் இருந்த சூடாமணி விஹாரம்? அது பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு ராஜராஜசோழன் காலத்தில் கட்டப்பட்டது. நாகப்பட்டினத்தில் பௌத்த விஹாரம் ஒன்று இருந்தது என்றால் அது சூடாமணி விஹாரம்தான். அது பின்னாளில் எப்படி இடிக்கப்பட்டது என்ற வரலாற்றை யாரும் பேசமாட்டார்கள். அதை பின்னால் எழுதுவோம். 




Saturday, 17 June 2023

கல்வெட்டு சொல்லும் கதைகள் - திருப்பணி


 கம கம” வென மடப்பள்ளியிலிருந்து வாசனை வந்துகொண்டிருந்ததுசிவபெருமானுக்கு உகந்த நைவேத்தியங்கள் செய்வதில் சம்பந்தனுக்கு அலாதிப் பிரியம்ஏனோ தானோவென்று செய்யாமல்பார்த்துப் பக்குவமாக ஒவ்வொரு தடவையும் பாகங்கள் செய்வான் அவன்அதனால் உச்சிகாலமாக இருந்தாலும் அர்த்தஜாமமாக இருந்தாலும் அந்தப் பிரசாதத்தைச் சாப்பிடுவதற்கே கூட்டம் கூடிவிடும்


இன்று கோவிலில் கூட்டம் அதிகமாக இராது என்று அவனுக்குத் தெரியும்வெளியே கடுமையான மழை பெய்துகொண்டிருந்ததுஅவ்வப்போது மத்தளம் கொட்டுவதைப் போல இடியோசை வேறுவிரைவாக இருட்டிவிடும் என்பதால்அவசரமாக பூஜைகளை சிவாச்சாரியார் முடித்துவிடுவார்ஆகவே நைவேத்தியமும் சீக்கிரமாக தயாராக வேண்டும்அந்தவேலையில் அவன் மும்முரமாக இருந்தபோது அண்ட கடாகங்கள் உடைவது என்று சொல்வார்களே அப்படி ஒரு பெரும் இடிஓசை கேட்டதுஅதைத் தொடர்ந்து இன்னொரு பெரும் சப்தம்ஏதோ விபரீதம் தான் நடந்துவிட்டது என்பதை உணர்ந்தசம்பந்தன் மழையையும் பொருட்படுத்தாமல் மடப்பள்ளிக்கு வெளியே ஓடினான்அங்கே அவன் கண்ட காட்சி !


சிறுகளப்பூர் காளத்தீஸ்வரர் கோவில் அவ்வளவு பெரிய கோவில் இல்லை என்றாலும் சுற்றுவட்டாரக் கிராமங்களிலிருந்துமக்கள் அடிக்கடி வந்து தரிசித்துச் செல்லும் கோவில் என்பதால் எப்போதும் அங்கே ஓரளவு கூட்டம் இருக்கும்காவிரிக்கரைக்கு அருகில் இருந்தாலும் அந்த ஆற்றின் இருகரைகளிலும் உள்ள பல கோவில்களைக் கற்றளியாக மாற்றிக்கட்டிய ஆதித்த சோழன் என்ன காரணத்தாலோ அந்தக் கோவிலைகுறிப்பாக விமானத்தை செங்கல் திருப்பணியாகவேவிட்டுச்சென்றுவிட்டான்அவனைத் தொடர்ந்து வந்த சோழ ராஜாக்களும் கோவிலை மாற்றிக் கட்டவில்லைகொஞ்சநாட்களாகவே விரிசல் விட்டுச் சிதிலமாக இருந்த விமானம் அன்று பெய்த மழையில் முற்றிலுமாகச் சிதைந்து விட்டதுஇடிஅதன் மேல் விழுந்ததோ பக்கத்தில் விழுந்ததோவிமானம் முற்றிலுமாகச் சேதமடைந்து வீழ்ந்து கிடந்ததுஅந்தக்காட்சியைப் பார்த்த சம்பந்தனின் இதயமே ஒரு கணம் நின்றுவிட்டதுஅழகான அந்த விமானம்காளத்தீஸ்வரரின் சிரத்திற்குக்குடையாக நின்று கொண்டிருந்த விமானம் இப்படி வீழ்ந்து கிடக்கிறதே என்பதை நினைத்து அவன் கண்ணில் நீர் ஆறாகப்பெருகி ஓடியது


கோவில் பரிசாரக வேலை சம்பந்தனுக்குப் பரம்பரையாக வந்ததுஇளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்துவிட்டஅவனுக்கு அந்தக் கோவில்தான் எல்லாமே கோவிலில் இறைவனுக்கு நைவேத்தியம் படைக்கும் வேலையைமனமகிழ்ச்சியுடன் செய்துவந்தான் அவன்உமையிடம் ஞானப்பால் அருந்திய திருஞானசம்பந்தனின் பெயரையே அவனுக்கும்வைத்திருந்தார் அவன் தந்தைஆகவே சிவபக்தி அவனிடம் இயற்கையாகவே இருந்ததுஅதனால்தான் கோவிலுக்கு ஏற்பட்டஇந்த இழப்பை அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லைஇரவு முழுவதும் அவனுக்குத் தூக்கமே வரவில்லை.


மறுநாள் காலையில் ஊர்ச்சபை கூடியதுவிமானம் விழுந்தது அபசகுனம் என்றும் அதற்குத் தகுந்த பரிகாரங்கள்செய்யவேண்டும் என்று ஊர்ப்பெரியவர்கள் முடிவுசெய்தனர்கோவில் சிவாச்சாரியாரான பிச்சை குருக்கள் அதற்குத் தகுந்தஏற்பாடுகளை ஏற்கனவே செய்துவிட்டதாகவும் திருத்தவத்துறையிலிருந்து (லால்குடிஉபாத்தியாயர்கள் வருகின்றனர் என்றும்சொன்னார்


அதெல்லாம் சரி விழுந்த விமானத்தை திரும்பக் கட்டவேண்டாமாஎவ்வளவு சீக்கிரம் செய்யமுடியுமோ அவ்வளவு சீக்கிரம்செய்யணும்” என்றார் ஊரின் பாட்டோலையான அத்தியூரான்


அதையும் செய்துவிடுவோம்ஏற்கனவே இருந்ததுபோலவே செங்கலால் கட்டிவிடுவோம்” என்றார் ஊர் நாட்டாமை


இப்போது கூட்டத்தில் இருந்து நடப்பவைகளை கவனித்துக்கொண்டிருந்து சம்பந்தன் குறுக்கிட்டான் “ஐயாஒருவிண்ணப்பம்


சொல்லு சம்பந்தாஎன்ன விஷயம்


உங்களுக்குத் தெரியாததில்லசெங்கல் விமானம் ரொம்ப நாள் நீடிக்காதுதிருப்பியும் இந்த மாதிரி ஆகிடும்அதனால தான்ஆதித்த மகாராஜா பல கோவில்கள கருங்கல்லா மாத்தினார்நாமளும் அது மாதிரி கருங்கல் விமானமா ஆக்கிடுவோம்” என்றான் சம்பந்தன்


கூட்டத்தில் அதைக் கேட்டு சலசலப்புக் கிளம்பியதுகருங்கல் விமானம் வைக்கணும்னா அது என்ன சின்ன விஷயமா என்றார்ஒருவர்அதற்குச் செலவு அதிகம் பிடிக்குமே என்று சந்தேகம் கிளப்பினார் வரிப்பொத்தகக் கணக்கன் நாராயணன்அந்தவேலையெல்லாம் யார் இழுத்துப் போட்டுச் செய்யறதுஊரில் மழைச் சேதம் அதிகமாக இருக்கு,அதைக் கவனிக்கிறதாஇல்லை விமான வேலையையா என்றார் இன்னொருவர்


கொஞ்சம் பொறுமையா இருங்கஆளுக்காள் சத்தம் போடாதீங்க” என்று அடக்கிய நாட்டாமை, “சம்பந்தாநீ சொல்றதுசரிதான்ஆனாலும் அதற்கான ஸ்தபதிகளை வெளியூரிலிருந்து கொண்டுவரணும்கல் விலை அதிகம்திருப்பணிக்கு அதிகசெலவும் வேலையும் பிடிக்கும்இதையெல்லாம் யாரப்பா செய்வதுகுலோத்துங்க ராஜாவிடம் உதவி கேட்கலாம்னா அவர்பாண்டிய நாட்டுக்குப் போர் செய்யப் போயிருக்கார்அவர் எப்போ வருவதுஎப்போ இந்த வேலை முடிவது அதனால்இப்போதைக்கு செங்கல் விமானமே கட்டுவோம்” என்றர்


ஐயாபண்ணுவது ஒரு தடவைஇப்போவே அதை திருத்திச் செய்வதுதானே சரிசெய்வன திருந்தச் செய்னுதானேமுன்னோர்கள் சொல்லிருக்காங்க” என்றான் சம்பந்தன்.


அதெல்லாஞ்சரிஅதற்குப் பணம் எங்க இருந்து வரும்யார் இந்த வேலையைச் செய்வது?” என்று கேட்டார் பாட்டோலை


நான் செய்கிறேன் ஐயாக்களேஊர் ஊராகப் போய் சிவன் திருப்பணின்னு சொல்லி பணம் கொண்டுவருகிறேன்எல்லாவேலையையும் நானே செய்கிறேன்காளத்தீஸ்வரருக்கு நாம செய்யலைன்னா யார் செய்வா” என்று உணர்ச்சிவசப்பட்டான்சம்பந்தன்.


இதைக் கேட்டு கூட்டத்தில் சிரிப்பொலி எழுந்ததுநடக்கிற காரியமா இது என்று சிலர் வெளிப்படையாகவே பேசினார்கள்.


அப்போது பிச்சைக் குருக்கள் சம்பந்தனுக்கு ஆதரவாகப் பேச வந்தார். “சம்பந்தன் சொல்வதும் சரிதான்அடிக்கடி விமானம்விழுவது ஊருக்கு நல்லதில்லைகட்டறதுதான் கட்டறோம்கல்விமானமாகவே கட்டிடலாம்சம்பந்தன் தான் வேலைசெய்யறேன்னு சொல்றானேஅவனுக்கு ஒரு வாய்ப்புக் கொடுப்போமேமுடியலைன்னா இருக்கவே இருக்கு செங்கல்விமானம்” என்றார் அவர்


நாட்டாமை யோசித்தார்அப்போது ஊர்த்தலையாரியான நாகப்பன் “அதெல்லாம் சரிப்படாது தலைவரேசம்பந்தன்ஒண்டிக்கட்டைஊர்த்திருப்பணின்னு காசை வசூலிச்சுட்டு கம்பி நீட்டிட்டான்னா கொடுத்தவங்களுக்கு யார் பதில் சொல்றதுபக்கத்து ஊர் கோவிலில் நடந்த விஷயம் தெரியுமுல்ல” என்றார் பிரசாதத்தைக் கொஞ்சம் அதிமாகச் செய்து தனக்குத்தரவேண்டும் என்று அவர் கேட்டபோது சம்பந்தன் அதை மறுத்துசிவன் சொத்து குலநாசம் என்று அவருக்கு அறிவுரை வேறுசொன்னான் என்பதால் அவருக்கு அவன் மேல் எப்போது ஒரு கோபம் உண்டு


இருந்தாலும் இந்தக் கேள்வியைக் கேட்டு ஊரார் வாயடைத்துத் தான் போனார்கள்பக்கத்து ஊர் கோவிலில் இது போலத்திருப்பணி செய்கிறேன் என்று கிளம்பிய ஒருவன் காசை வசூலித்தபிறகு ஊரை விட்டே ஓடிவிட்டான்ஆகவே சம்பந்தனும்அது போலச் செய்துவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வி அனைவரது மனத்திலும் எழும்பியதில் வியப்பில்லை


ஊராரின் சிந்தனை எந்த திசையில் ஓடுகிறது என்பதைப் புரிந்து கொண்ட சம்பந்தன் வெகுண்டெழுந்தான் “சிவன் சொத்துக்குலநாசம்னு உங்க எல்லாருக்கும் சொல்லும் நான் அப்படிச் செய்வேனா இருந்தாலும் உங்க சந்தேகம் போகணும்இல்லையாஅப்போ நான் சொல்வதைக் கேளுங்கள்என்னுடைய கைகளிலும் கால்களிலும் விலங்கு பூட்டிவிடுங்கள்விலங்கின் சாவி நாட்டமையிடமே இருக்கட்டும்வசூலித்த காசில் என் சொந்த செலவுக்கு எதுவும் எடுக்கமாட்டேன்அதற்குஅடையாளமா என்னுடைய உடம்பில் ஒற்றை ஆடை மட்டுமே இருக்கும்கீரை மட்டுமே எனக்குச் சாப்பாடுதிருப்பணி முடியும்வரை இதுதான் என்னுடைய வாழ்க்கைஇது காளத்தீஸ்வரர் மேல சத்தியம்” என்று ஆவேசமாகக் கூறினான்


ஊர் மக்களுக்கு இதைக் கேட்டதும் மெய்சிலிர்த்தது. “அதுக்கில்லை சம்பந்தா” என்று ஏதோ கூறவந்த நாட்டாமையை அடக்கிய அவன். “ஐயா தயவுசெய்து எந்த மறுப்பும் சொல்லாதீர்கள்” என்று அவர் காலில் விழுந்தான்அதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது.


சம்பந்தன் விருப்பப்படியே அவன் கைகால்களில் விலங்கு பூட்டப்பட்டதுஒற்றை ஆடை அணிந்து ஊர் ஊராகப் போய் பணம்கொண்டுவந்தான் அவன்முத்தையா ஸ்தபதி என்ற சிறந்த சிற்பியால் கோவில் விமானம் கற்றளியாக உருவெடுத்தது


இதோ நல்ல நாளில் பிச்சை குருக்கள் கும்பம் ஏந்திவர விமானத்திற்கு அபிஷேகம் சிறப்பாக நடந்து முடிந்ததுசம்பந்தனின்விலங்குகளை அகற்றிய  நாட்டாமை நாத்தழுதழுக்க “சம்பந்தா நீ செய்த பணிக்கு ஈடு எதுவும் இல்லைஇருந்தாலும்எங்களால் முடிந்த ஒன்றை நாங்க செய்திருக்கிறோம்” என்று சொல்லி கோவில் மண்டபத்திற்குக் கூட்டிச் சென்றார்அங்கேஒரு தூணுக்குத் திரை போட்டிருந்தது. “உன் கையால் அந்தத் திரையை எடு சம்பந்தா” என்றார்.


திரை விலகியதும்சம்பந்தனின் கண்ணில் நீர் பெருக்கோடியதுஅங்கே கைகால் விலங்கோடு சம்பந்தனின் சிற்பம்வடிக்கப்பட்டிருந்ததுஇந்தக் கோவிலும் விமானமும் உள்ள வரையிலும் உன் பெயர் நிலைத்து நிற்கும் சம்பந்தா என்றுசொன்ன  நாட்டாமைஅதுமட்டுமல்லஇந்த நிகழ்வை கல்வெட்டாகவும் இந்தக் கோவிலில் பொறித்து வைத்துவிட்டோம்கைமாறில்லாமல் நீ செய்த சிவப்பணி என்றைக்கும் நிலைத்திருக்கும் என்றார் அவர்


காளத்தீஸ்வரரை நோக்கிக் கை கூப்பினான் சம்பந்தன்


*பாட்டோலை - ஊரில் நடக்கும் நிகழ்வுகளை குறிப்பெடுப்பவர்

(கோவில் படம் : சித்தரிக்கப்பட்டது)


சிறுகளப்பூர் காளத்தீஸ்வர் கோவில் கல்வெட்டு :