Skip to main content

Posts

ராஜேந்திரரின் கடாரப் படையெடுப்பு

Recent posts

திருமுறை கண்ட சோழன் யார்

சமீபகாலமாக ஏதாவது ஒரு சர்ச்சையைக் கிளப்பி கவனப்படுத்தும் வழக்கம் அதிகமாக வருகிறது. அப்படி ஒன்று நேற்று கண்ணில் பட்டது. திருமுறை கண்ட சோழன் என்று அழைக்கப்படுபவன் ராஜராஜ சோழன் இல்லையாம். ஏனென்றால் அவனுடைய காலத்திற்கு முன்பே கல்வெட்டுகளில் பதிகம் படித்ததற்கான சான்றுகள் உள்ளனவாம். அவற்றை வரிசையாக அடுக்கி இந்தக் கேள்வியை ஒருவர் எழுப்பியிருந்தார். இந்த விஷயத்தில் நான் பெரிதும் மதிக்கும் சதாசிவப் பண்டாரத்தார் அவர்களும் சிறிது இடறியிருப்பதால் கொஞ்சம் விரிவாக இதைப் பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன். முதலில் சைவத் திருமுறைகளைத் தொகுத்ததற்காகக் கிடைக்கும் ஒரே சான்று திருமுறை கண்ட புராணம் என்ற நூல்தான். இது உமாபதி சிவாச்சாரியார் இயற்றியது. அதையே ஏற்றுக்கொள்ள முடியாது என்று நினைப்பவர்கள் இந்தக் கட்டுரையை மூடி வைத்துவிடலாம். ஏனென்றால் ஒட்டுமொத்த விவாதமும் இந்த நூலை ஒட்டியே இருக்கிறது. அந்த நூலில் என்ன சொல்லியிருக்கிறது என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம். சோழவம்சத்தில் வந்த அரசன் ஒருவன் தேவாரப் பதிகம் ஒன்றைக் கேட்கிறான். அதனால் மனம் உருகி மற்ற பாடல்களையும் கேட்க நினைக்கிறான். ஆனால் யாரிடமும் மொத்தத் தொ

தமிழ் அணங்கு என்னும் அபத்தம்

தமிழ்த்தாயை அணங்காகச் சித்தரிக்கும் படம் ஒன்றை எல்லாரும் பார்த்திருப்பீர்கள் . தமிழைப் பற்றிய புரிதல் கொஞ்சம் கூட இல்லாத சித்தரித்தல் அது . இதில் பாரதி பாரதமாதாவை சினம் கொண்டவளாகப் பாடியதால் , ஏன் தமிழ்த்தாயும் அப்படி இருக்கக்கூடாது என்று நண்பர் ஒருவர் கேட்டிருந்தார் .  நம்முடைய மரபில் ஒவ்வொரு உருவகத்திற்கும் அதற்கான காரணம் உண்டு . பாரதமாதா சினம் கொண்டது , தான் அடிமைத்தளையில் சிக்கித்தவிக்கும் போது தம்முடைய புதல்வர்கள் அதிலிருந்து தன்னை விடுவிக்க முடியாத கோழைகளாக இருக்கின்றார்களே என்பதன் காரணமாக ( பாரதியின் பார்வையில் ). சாந்தமே உருவான அன்னை காளி உருக்கொண்டது தீயவற்றை அழிப்பதற்கு . சாதாரணமாக நாமே கோபத்தை அளவோடு பயன்படுத்த வேண்டும் . எடுத்ததெற்கெல்லாம் காரணமில்லாமல் கோபப்பட்டால் வீட்டில் உள்ளவர்களே ‘ ஒரு மாதிரி ’ பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள் . தமிழன்னைக்குக் கோபம் கொள்ள இப்போது எந்தக் காரணமும் இல்லை . அப்படியே கோபம் அடைந்தாலும் தலைவிரி கோலமாக வெள்ளை ஆடை உடுத்தெல்லாம் கோபமடையமாட்டாள் . அது தமிழ் மரபில் அமங

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

திருப்பாவைக்கு அருமையாகவும் வித்தியாசமாகவும் பிஏகே அவர்கள் ஃபேஸ்புக்கில் உரை எழுதி வருகிறார். அதில் இன்று படித்த உரை சற்று இடறியது. இன்றைய பாசுரத்திற்குப் பொருள் சொல்லும் போது ஆண்டாளின் காலத்தைப் பற்றி அறிஞர் மு ராகவய்யங்கார் எழுதிய குறிப்பை அவர் தந்திருக்கிறார். அதில் " பெரியாழ்வார் பாண்டியன் கோச்சடையன் காலத்திற் தொடங்கி சீமாறன் சீவல்லபன் என்று அழைக்கப்படும் பாண்டியன் நெடுஞ்சடையன் காலத்தில் (எட்டாம் நூற்றாண்டு) வாழ்ந்தார்" என்றும் " வெள்ளி எழுச்சியும் வியாழன் அஸ்தமனமும் ஒரே சமயத்தில் எட்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்த நாள் டிசம்பர் 18, 731" என்றும் உள்ளது. நான் ராகவய்யங்கார் கட்டுரையைப் படித்ததில்லை என்பதால் இந்தக் குறிப்புகளில் சில குழப்பங்களைக் காண நேர்ந்தது. பாண்டியன் (பராந்தக) நெடுஞ்சடையனும் சீமாறன் சீவல்லபனும் ஒரே ஆள் இல்லை என்பது ஒரு புறம். பொயு 731ல் பாண்டிய நாட்டை ஆட்சி செய்தவன் ராஜசிம்ம பாண்டியன். அவனும் சரி, அவன் தந்தை கோச்சடையன் ரணதீரனும் சரி வைணவர்களாக அறியப்படவில்லை. சொல்லப்போனால் கோச்சடையன் காலத்தில் சுந்தரர் மதுரைக்கு வந்ததும், அவரோடு ரணதீரன் பல கோவில்கள