Skip to main content

Posts

Showing posts from 2017

இராஜராஜப் பெருவேந்தன்

இன்று சதயத்திருநாள். இந்தியாவின் தலைசிறந்த மன்னர்களில் ஒருவரான ராஜராஜனின் பிறந்த நாள். தமிழகத்தின் ஆகச் சிறந்த மன்னனாக அவரைச் சந்தேகமில்லாமல் அறிவிக்கலாம். அப்படி அவர் செய்த செயற்கரிய செயல் என்ன? மற்ற மன்னர்களிடமிருந்து, ஏன் கடல்கடந்து வெற்றிகளைக் குவித்த அவருடைய மகன் ராஜேந்திரனிடமிருந்து கூட  ராஜராஜன் மாறுபட்டது எப்படி? பண்டைக்கால (சிறந்த) மன்னர்களைப் பற்றிய பொதுவான அபிப்பிராயம், அவர்கள் முடிசூடினார்கள், எதிரிகளை போர்க்களத்தில் வீழ்த்தினார்கள், மக்களைக் கொடுமைப்படுத்தாமல் வாழ்ந்தனர், கோவில்களைக் கட்டினார்கள், குளங்களை வெட்டினார்கள் என்பதுதான். ராஜராஜனும் இவை எல்லாவற்றையும் செய்தார். ஆனால் அவருடைய செயல்முறையின் வேறுபாடே அவரை மற்றவர்களிடமிருந்து உயர்த்திக் காட்டுகிறது. முதலில் ராஜராஜன் அரியணை ஏறிய விதத்தையே எடுத்துக்கொள்வோம். அவர்  தமையனான ஆதித்த கரிகாலன் மர்மமான முறையில் கொல்லப்பட்டிருந்தான். சோழ வம்சத்தின் மற்றொரு கிளையின் வாரிசான  மதுராந்தகத்தேவன் அரியணை ஏறும் ஆசை கொண்டிருந்தான். இருந்தாலும், அருள்மொழிவர்மனே தங்களது மன்னராக வேண்டும் என்று நாட்டு மக்கள் கருதினார்கள். அவர்  நி

திருமங்கை ஆழ்வாரின் காலம்

ஆழ்வார்களிலேயே அவரது காலம் இன்னது என்று தெளிவாகத் தெரியக்கூடியது திருமங்கை ஆழ்வாரின் காலம்தான். ஆனாலும் ஒரு பரம்பரைக் கதை அவர் திருஞானசம்பந்தரைச் சந்தித்ததாகக் கூறுவதால் பலருக்கு இந்த விதத்தில் குழப்பம் நேரிடுகிறது. முதலில் திருஞானசம்பந்தரின் காலத்தைப் பார்ப்போம். இவர் திருநாவுக்கரசரின் சமகாலத்தவர் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. அப்பரின் முதிய காலத்தில் சிறுவயதினரான சம்பந்தரோடு பல இடங்களுக்குச் சென்று பதிகங்கள் இயற்றியதைப் பற்றி பெரிய புராணமும் மற்றும் பல நூல்களும் குறிப்பிடுகின்றன.  மகேந்திர பல்லவரை சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றியது நாவுக்கரசர் என்பதால் அவருடைய காலத்தில் பிற்பகுதியில் சம்பந்தர் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதில் ஐயமில்லை. சிறுத்தொண்டரான ' மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாபித் தொன்னகரம் துகளாகச்' செய்த பல்லவ தளபதி பரஞ்சோதியை ஞானசம்பந்தர் சந்தித்தது பற்றியும் குறிப்புகள் உண்டு. எனவே சம்பந்தர் நரசிம்மவர்மரின் சமகாலத்தவர் என்பது வெள்ளிடைமலை. அதேபோல, சமணரான கூன்பாண்டியனை சைவத்திற்கு சம்பந்தர் மாற்றினார் என்பதற்கும் ஆதாரங்கள் பல உண்டு. கூன்பாண்டி

களப்பிரர் யார் - 2

களப்பிரர் யார் என்பதை அறிய, பொயு இரண்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் நிலையைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும். தமிழகத்தில் மூவேந்தர்களும், வேளிர்களும் ஆட்சி செய்துகொண்டிருந்த காலம் அது. இந்த வேளிர்கள்  சில சமயம் மூவேந்தர்களின் சிற்றரசர்களாகவும், சில சமயம் தனித்தும் ஆட்சி செய்துகொண்டிருந்தனர். இவர்கள் வடநாட்டிலிருந்து குடிபுகுந்தவர்கள். முதலில் கொண்காணம், ஒளிநாடு, முத்தூற்கூற்றம், பொதிகைநாடு, மிழலைக் கூற்றம், குண்டூர்க்கூற்றம், வீரை, துளுநாடு ஆகிய இடங்களில் ஆட்சி செய்துகொண்டிருந்த வேளிர், சிறிது சிறிதாக தமிழகத்தின் பல பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செய்யத் துவங்கினர் என்பது வரலாறு. ஆய், பாரி, நன்னன் ஆகியோர் குறிப்பிடத்தக்க வேளிர் அரசர்கள். இப்படிப் பல பகுதிகளாகப் பிரிந்து கிடந்த காரணத்தால், மூவேந்தர்களுக்குள் அவ்வப்போது பெருவீரர்கள் தோன்றியபோதிலும், தமிழகத்தில் ஒரு பேரரசு உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதே சமயம், மத்திய இந்தியாவில் சாதவாகனப் பேரரசு வலிமை இழக்க ஆரம்பித்தது. அதன் சிற்றரசர்களாக ஆந்திராவின் வடபகுதியை (தற்போதைய விஜயவாடாவைச் சுற்றியுள்ள பகுதிகள்) ஆட்சி செய்துகொண்டிருந்த

களப்பிரர் யார் - 1

'ரூம் போட்டு யோசிப்பாங்களோ' என்ற பிரபலமான தமிழ்திரைப்படக் காமெடி வசனம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, வரலாறு என்ற பெயரில் இப்போதெல்லாம் இணையத்தில் எழுதிக்குவிப்போருக்குப் பொருந்தும். அதமபட்சம் சாண்டில்யன் நாவல்களில் வரும் அளவு கூட வரலாற்றுக் குறிப்புகள் இல்லாமல் எழுதப்பட்ட பல கட்டுரைகள் சர்வசாதாரணமாகக் கிடைக்கின்றன. அஜெண்டா வைத்துக்கொண்டு எழுதும்போது ஆய்வுகள் எதற்கு என்ற நோக்கில் எழுதப்படும் இவ்வகைக் கட்டுரைகளுக்கு எதிர்வினை எழுத வேண்டுமா என்று யோசித்தாலும், இதுவே வரலாறு என்று நிலைநிறுத்தப்படும் அபாயம் இருப்பதால், அப்படி எழுதப்பட்ட களப்பிரரைப் பற்றிய கட்டுரைக்கு ஒரு பதில். களப்பிரர் காலத்தைப் பற்றிய சரியான தகவலோடு தொடங்கும் (பொயு 2 - 5ம் நூற்றாண்டு) இக்கட்டுரை இரண்டாவது பத்தியில் சறுக்கிவிடுகிறது. தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை எல்லாம் பொயு 1ம் நூற்றாண்டிலிருந்து படைக்கப்பட்டதாகச் சொல்கிறது.  பொயுமு 10ம் நூற்றாண்டிலேயே இயற்றப்பட்டதாக சிலரால் குறிப்பிடப்படும் தொல்காப்பியத்தின் காலத்தை, பொயுமு 1ம் நூற்றாண்டிற்குப் பின்னால் கொண்டு செல்லமுடியாது என

சத்யபுத்திரர்கள் யார்?

தமிழ் வரலாற்றில் சங்க கால நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ள இலக்கியங்களே பெரிதும் உதவியாக இருக்கின்றன. கல்வெட்டுகளோ / செப்பேடுகளோ இன்ன பிற ஆவணங்களோ அக்காலத்தில் இல்லை. இருந்தாலும் அதிகம் அறியப்படவில்லை. இத்தகைய சூழ்நிலையில் அசோகரது தமிழ்நாடு சம்பந்தப்பட்ட கல்வேட்டு ஒன்று பெரும் ஆய்வுக்கு உட்பட்டது. குஜராத்தில் உள்ள கிர்நார் மலைச்சரிவில் (சிங்கங்களது சரணாலயம் இருக்கிறதே, அதே கிர்நார்தான்) அசோகரது கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டது. தமது அரசின் எல்லைகளை குறித்து சாஸனம் செய்திருக்கும் அவர். அரசின் எல்லைப்புற மன்னர்களாக “சோட, பாட, சத்யபுதோ, சேரபுதோ, தம்மபாணி” என்று குறித்திருக்கிறார். அசோகர் குறிக்கும் தமிழக மன்னர்களை சோட – சோழ, பாட – பாண்டிய, சேரபுதோ- சேர என்று எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம். தம்மபாணி என்பது இலங்கை அரசர்களைக் குறிப்பதாகும். இதில் சத்யபுதோ யார் என்பது பற்றி குழப்பம் நிலவியது. ஏனெனில் தமிழ் இலக்கியங்களோ, வேறு ஆவணங்களோ இப்படி ஒரு மன்னர்குலம் இருப்பதை பதிவுசெய்யவில்லை. எனவே சில வரலாற்று ஆசிரியர்கள் ஆந்திராவை ஆண்ட சாதவாகனர்களே சத்யபுத்திரர்கள் என்று சொன்னார்கள். இன்னும் சிலர், மராட்

ஆதி சங்கரரின் பணி

ஆதி சங்கரரைப் பற்றிப் பரப்பப்படும் பல தவறான செய்திகளில் முதன்மையானதாக நான் கருதுவது அவர் புத்த, ஜைன சமயங்களை அழித்தார் என்பதுதான். நேற்று ஒரு டிவிட்டர் இழையிலும் இதுபோன்ற ஒரு கருத்து வந்ததைக் காண நேர்ந்தது. வரலாற்று ரீதியாகப் பார்த்தால் இதற்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லை என்பது வெள்ளிடைமலையாகப் புலப்படும். முதலில் புத்த, ஜைன மதங்களின் காலத்தை எடுத்துக்கொள்வோம். பொயுமு நான்காம்-ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து இந்த மதங்கள் வலுப்பெறத்துவங்கின. ஜைன மதம் வணிகர்களாலும், சந்திரகுப்த மௌரியர், அஜாதசத்ரு, காரவேலர் ஆகிய அரசர்களாலும் ஆதரிக்கப்பட்டு வளர்ச்சியடைந்தது. இன்றும் வட நாட்டில் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த பெரு வணிகர்கள் உள்ளனர் என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அதே போல, புத்த மதம் அசோகச்சக்கரவர்த்தியின் காலத்தில் பெரும் சிறப்பை அடைந்தது. ஆனால், மௌரியப் பேரரசின் வீழ்ச்சியை அடுத்து இந்த இரண்டு மதங்களும் பல சிக்கல்களைச் சந்தித்தன. ஜைனர்களின் கடுமையான கட்டுப்பாடுகள், சடங்குகளைத் தாங்காத மக்கள் அதிலிருந்து விலகத் துவங்கினர். புத்த மதத்திற்கும் அரசர்களின் ஆதரவு கிடைக்காததால், இந்தியாவில் அதன் செல

சீனத் தமிழ் கல்வெட்டு

திரைகடலோடியும் திரவியம் தேடு என்ற பழமொழிக்கேற்ப பண்டைக்காலத்திலிருந்தே தமிழர்கள் உலகமெங்கும் வணிகம் செய்து வந்தார்கள் என்று சங்க இலக்கியம் முதல் வரலாற்றுக் குறிப்புகள் வரை நமக்குத் தெரிவிக்கின்றன. சோழ அரசு சிறப்பான நிலையை ராஜராஜன் காலத்திலிருந்து அடையத் துவங்கியவுடன், வணிகக் குழுக்களின் வீச்சும் விரிவடைந்தது. நானா தேசத்து ஐந்நூற்றுவர் போன்ற குழுக்கள் வலுவடைந்தன. இந்த வணிகக் குழுக்கள் வெறுமனே கப்பல் மூலம் சென்று துறைமுக நகரங்களில் வணிகம் செய்வதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. தாம் செல்கின்ற நாடுகளில் குடியிருப்புகளையும் அமைத்து அந்தந்த நாடுகளில் உள்நாட்டு வணிகத்தையும் விரிவுபடுத்தினர். அப்படி அமைந்ததுதான், தென் சீனாவில், க்வாங்சூ மாகணத்தில், சுவான் சௌ என்ற இடத்தில் ஏற்பட்ட குடியிருப்பும். கோவில் இல்லாத இடத்தில் குடியிருக்க வேண்டாம் என்ற முதுமொழிக்கு ஏற்ப,  அங்கே ஒரு கோவிலையும் அவர்கள் கட்டினர். அப்போது சீனாவை ஆண்டுகொண்டிருந்தவர் மங்கோலிய வம்சத்தவரும், செங்கிஸ்கானுடைய கொள்ளுப்பேரருமான குப்ளாய் கான். அவரைப் பற்றி மார்க்கோ போலோவின் மூலம் அறிந்துகொண்டிருப்பீர்கள். குப்ளாய் கானுடைய முழுப்பெய