Skip to main content

Posts

Showing posts from January, 2016

தமிழ் எழுத்து வரிவடிவம் – பிராமி 4

தமிழ் பிராமி எழுத்துக்கள் முதலில் மத சம்பந்தமான எழுத்துக்களுக்குப் பயன்பட்டன என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து. முக்கியமாக சமணர்களின் வாழிடங்களில் இவை அதிகம் காணப்படுவதால் இந்த முடிவுக்கு அவர்கள் வந்தனர். பிற்காலத்தில் முதுமக்கள் தாழி, நடுகற்கள் போன்றவற்றிலும் இந்த வகை எழுத்துக்கள் காணப்படுவதல் பொதுப் பயன்பாட்டுக்கும் இந்த வகை எழுத்துக்கள் நாளடைவில் வந்திருக்க வேண்டும். இது தவிர  இன்னொரு  முக்கியமான செய்தி, வெளிநாடுகளிலும் தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டறியப்பட்டிருக்கிறது என்பதாகும். தாய்லாந்தில் ஒரு பானையில் து ர ஓ   என்ற எழுத்துக்கள் கண்டறியப்பட்டிருக்கிறது. அது துரவன் என்ற சொல்லாக, ஒரு துறவியைக் குறிப்பதாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதுபோலவே எகிப்தில் செங்கடல் அருகே  உள்ள துறைமுக நகரமொன்றில் ஒரு பானையில் 'பானை உறி' என்று பொறிக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டறியப்பட்டன. தமிழர்களின் கடல் கடந்த பிரயாணங்களுக்கும் வணிகத்துக்கும் இவை சான்றாக விளங்குகின்றன.

தமிழ் எழுத்து வரிவடிவம் – பிராமி 3

தமிழ் பிராமி எழுத்துக்களின் வளர்ச்சியை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம் என்று பார்த்தோம். இந்த மூன்று பிரிவையும் Stage I, Stage II  மற்றும் Stage III என்று அழைக்கிறார்கள். இந்த மூன்று பிரிவுகளுக்குள்ள வேறுபாடு அடிப்படையில் உயிரெழுத்து மற்றும் உயிர்மெய் எழுத்துக்களின் வரிவடிவங்களில் உள்ளது.  உதாரணமாக 'ந' என்ற குறில் எழுத்து முதல் முறையில் (Stage I)  கீழே உள்ளது போல எழுதப்படும். இது ஒரு உயிர்மெய் எழுத்து என்பதைக் குறிக்க ஒரு சிறிய கோடு மேலே உள்ளதைக் கவனிக்கவும். இதுவே நா என்ற நெடிலாக எழுதப்படும்போது பக்கத்தில் ஒரு 'அ' சேர்க்கப்படும் இரண்டாவது முறையில் 'ந்' என்ற மெய்யெழுத்துக்கும் 'ந' என்ற உயிர்மெய் எழுத்துக்கும் ஒரே வரி வடிவம்தான், கீழே உள்ளது போல. நா என்ற நெடிலை எழுதவேண்டுமானால் முதல் முறையில் பார்த்தது போல மேலே ஒரு சிறிய கோடு இடப்படும். இப்படி மெய்யெழுத்தையும் உயிர்மெய்யெழுத்தையும் ஒரே வரிவடிவத்தில் எழுதும் முறை அசோகரின் பிராமி (பிராகிருத) வடிவத்திலும் உண்டு. இதை ஆதாரமாக வைத்து தமிழ் பிராமி அசோகரின் பிராமி வரிவடிவத்துக்கு முற்பட்டது என்று ச

தமிழ் எழுத்து வரிவடிவம் - பிராமி 2

அசோகர் காலத்து பிராமி புத்த, சமண துறவிகளால் தமிழகத்துக்குக் கொண்டுவரப்பட்டு மாற்றம் செய்யப்பட்டது என்ற கருத்தை ஒப்புக்கொண்டோமானால் , எழுத்துக்களை வடமொழியான பிராகிருதத்திலிருந்து தமிழுக்கு ஏற்றவாறு அமைக்க சில மாறுதல்கள் செய்யப்பட்டிருக்க வேண்டும். உதாரணமாக தமிழில் ஒரே எழுத்து நான்கு உச்சரிப்புகளில் வருவது இல்லை, (ka, kka, Ga, GGA) என்று வடமொழியில் வருவது போல. ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் தமிழ் பிராமியின் வளர்ச்சியை மூன்று  காலகட்டங்களாக பிரிக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார். முதலாவது பொ.வ. மு. 3ம் நூற்றாண்டிலிருந்து 1ம் நூற்றாண்டு வரை. இரண்டாவது பொ.வ.1லிருந்து 2ம் நூற்றாண்டு. மூன்றாவது காலகட்டம் பொ. வ. 2லிருந்து 4ம் நூற்றாண்டு வரை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும், கர்நாடக ஆந்திர மாநிலங்களின் தென்பகுதியிலும் ஏன் இலங்கையிலும் கூட நமக்குக்  கிடைத்திருக்கின்றன. எந்த வகையில் இந்த எழுத்துவரி வடிவம் மாறுபடுகின்றது?  இதன் வரிவடிவம் எப்படி இருக்கும் என்றெல்லாம் தொடர்ந்து பார்ப்போம்

தமிழ் எழுத்து வரிவடிவம் - பிராமி 1

கல்தோன்றி மண்தோன்றா காலத்து மூத்தகுடி என்று பேசப்பட்டாலும் தமிழ் ஆரம்பக்காலங்களில் பிற இந்திய மொழிகளைப் போலவே பேச்சு மொழியாகவே இருந்திருக்கிறது. அதற்கான முதல் எழுத்துவரிவடிவம் என்று பார்த்தல் அது தமிழ் பிராமி என்று சொல்லப்படும் எழுத்துவரிவடிவமாகும். இந்த தமிழ் பிராமியின் மூல எழுத்து வடிவம் அசோகர் காலத்தில் பிரபலமான வடஇந்தியாவின் பிராமி என்று சொல்லப்படுகிறது. இது விஷயத்தில் கருத்து வேறுபாடு இருந்தாலும் பெரும்பாலான ஆசிரியர்கள் இந்த முடிவோடு ஒத்துப்போகிறார்கள். இந்த பிராமி எழுத்துமுறையின் துவக்கமே  இன்னும் சரிபடத் தெரியவில்லை. ஒரு சிலர் அரமைக் என்று சொல்லப்படும் மத்தியக் கிழக்கு நாடுகளில் இருந்து இது இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்கிறார்கள். இன்னும் சிலர், இன்னும் அர்த்தம் அறிய முடியாத, சிந்து சமவெளி எழுத்து வடிவத்தின் பிற்கால மாற்றமே பிராமியாக உருவெடுத்து வந்தது என்றும் சொல்கின்றனர். இதனுடைய காலத்தைப் பொருத்தவரை பொ.வ.மு 5ம் நூற்றாண்டாக  இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் பார்ப்போம்

தமிழ்ப் புத்தாண்டும் இந்திய நாட்காட்டி முறைகளும் - 2

சூரியன் பூமியைச் சுற்றி நகரும் நீள்வட்டப் பாதையில் விண்மீன்கள் அமைந்திருப்பதாகப் பார்த்தோம் அல்லவா. சூரியன் பயணம் செய்யும் அந்தப் பாதையை ஒரு கோடாக உருவகித்தால் எல்லா விண்மீன்களும் அந்தப் கோட்டில் இருக்கவில்லை, மாறாக அதன் இருபுறத்திலும் அமைந்திருந்தன. அந்தப் பாதையிலேயே இருந்த சில விண்மீன்களில் முக்கியமானது அஸ்வினி என்ற பெயருடைய விண்மீன். சூரியன் பயணம் செய்கின்ற நீள்வட்டப்பாதையின் மத்தியில் அமைந்துள்ளது இது. இந்திய நாட்குறிப்புக் கணக்கீடும் முறை உருவான சமயத்தில் (கிட்டத்தட்ட பொ.வ. முதல், இரண்டாம் நூற்றாண்டுகளில்) வேனில் சமநாள், அதாவது இரவும் பகலும் சமமாக இருக்கும் நாள் சூரியன் அஸ்வினி மீனில் இருந்த போது வந்தது. காலப்போக்கில் பூமியின் அச்சு நகர்ந்து வந்ததில் காரணமாக அது மேற்கு நோக்கி இடம் மாறி தற்காலத்தில் மார்ச் 22ம் தேதியாக கணிக்கப்படுகிறது. அந்த நாளில் இருந்து தான் வசந்த காலம் துவங்கியது. இந்தக் காரணங்களால் அந்த விண்மீன், நீள்வட்டப் பாதையின் ஆரம்பப் புள்ளியாகவும், அது இடம்பெற்றிருந்த ராசியான மேஷம் ராசிக்கட்டத்தின் முதல் ராசியாகவும் அமைக்கப்பட்டது. இங்கு மட்டுமல்ல, உலகின் மற்ற ராசி வரி

தமிழ்ப் புத்தாண்டும் இந்திய நாட்காட்டி முறைகளும் - 1

புத்தாண்டு என்பது ஒரு  மகிழ்வுக்குரிய தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் பழையவற்றை மறந்து ஒரு புதுத் துவக்கத்தை அந்த நாள் உண்டாக்கும் என்று நம்புவோர் உண்டு. ஆனால் உலகத்திலேயே புத்தாண்டு என்பதை கேள்விக்குரிய ஒன்றாக ஆகிய ஒரே சமுதாயம் நம்முடைய தமிழர்களாகவே இருக்கும் என்றெண்ணுகிறேன். ஒவ்வொரு சித்திரை மாதமும் தை மாதமும் எது புத்தாண்டு என்பதில் ஏகப்பட்ட சர்ச்சைகள். அதற்கு மத, ஆன்மிக, கலாச்சார, மொழி சாயம் பூசுவோர் இருதரப்பிலும். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் நாட்குறிப்பு என்பது இது எதிலும் சம்பந்தப்பட்டதல்ல. உலகின் ஒவ்வொரு பகுதியிலும் பின்பற்றப்படும் நாட்காட்டிகள் ஏதாவது ஒரு அறிவியல் முறையின் அடிப்படையாகவே அமைந்தது. இந்திய நாட்குறிப்பு முறையும் இதற்கு விதிவிலக்கல்ல. அது ஒரு சமயம் சார்ந்தோ அல்லது ஒரு மொழி சார்ந்தோ அமைக்கப்பட்டதல்ல. அதன் பின்னால் இருக்கும் கணக்கீடுகளும் குறிப்புகளும் முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்தவை. மிகப் பழமையான இந்திய நாட்குறிப்பு முறையை அது பயன்படுத்தும் பெயர்சொற்களை வைத்து மதிப்பிடுவது சரியான செயல் அல்ல. அக்காலத்தில் பயன்படுத்தப்பட பல ச