Skip to main content

வாலைக்குமரி





பழங்காலத்தில் புலமைத்திறனைச் சோதிக்க ஈற்றடியைக் கொடுத்து அதற்கான பாடலை எழுதச்சொல்லும் வழக்கம் இருந்தது. பாரதியாரைக் கூட 'பாரதி சின்னப்பயல்' என்ற ஈற்றடியைக் கொடுத்து எழுதச்சொல்லி ஒருவர் வாங்கிக்கட்டிக்கொண்ட வரலாற்றைப் படித்திருக்கிறோம் அல்லவா.  அதன்படியே, இதுபோன்று ஈற்றடிகளைக் கொடுத்து புலமை விளையாட்டில் ஈடுபடுவதில் போஜராஜனுக்கு மிகவும் விருப்பமுண்டு. அவன் அரசவையில் காளிதாஸனில் இருந்து பல கவிராஜ சிம்மங்கள் இருந்ததால் அவர்களும் அரசனுக்கு ஈடுகொடுத்து பாடல்கள் இயற்றிவந்தனர்.

ஒருநாள் இரவு நகர்ச்சோதனை முடிந்து அதிகாலை நேரத்தில் போஜன் அரண்மனை திரும்பிக்கொண்டிருந்தான். வழியில் ஒரு குருகுலம், மாணவர்கள் சமஸ்கிருத ககர வரிசைப் பாடத்தை மனனம் செய்துகொண்டிருந்தனர். 'க(1), க(2), க(3), க(4)' என்று தாளக்கட்டோடு அவர்கள் உருப்போட்டது அரசனின் மனதில் அப்படியே பதிந்து விட்டது. அன்று அரசவையில் தன் மனதில் ஒலித்துக்கொண்டிருந்த 'க(1), க(2), க(3), க(4)'  வையே ஈற்றடியாகக் கொடுத்து அதற்கான பாடல் ஒன்றை இயற்றுமாறு புலவர்களைக் கேட்டுக்கொண்டான் போஜராஜன்.

புலவர்கள் முகத்தில் ஈயாடவில்லை. வார்த்தைகள் எதையாவது ஈற்றடியாகக் கொடுத்தால் அதற்குப் பாட்டெழுதலாம். ககரவரிசைக்கு எப்படி எழுதுவது?  காளிதாஸன் மனதிலும் குழப்பம். அரசனுக்கு காளிதாஸனையே மடக்கிவிட்ட களிப்பு. 'அவசரம் ஏதுமில்லை, ஒரு நாள் கூட எடுத்துக்கொள்ளுங்கள்' என்று தாராளமனதோடு அவர்களுக்கு நேரம் அளித்து அவையைக் கலைத்தான் அரசன்.

அரசன் அளித்த ஈற்றடிக்குப் பாட்டு எழுதும் தோன்றாமல், வருத்தத்தோடு வீடு நோக்கி நடந்த காளிதாஸன் அம்பிகையை மனதில் கண்மூடி தியானித்தான். கண்ணைத் திறந்து பார்த்தால், எதிரில் குனித்த புருவமும் கொவ்வைச்செவ்வாயில் குமிழ் சிரிப்புமாய் ஒரு சிறுமி. துறுதுறுப்பான அந்தக் குழந்தையைப் பார்த்ததும் காளிதாஸன் தன் கவலையை மறந்து அவளோடு உரையாடத்துவங்கினான்.

கா த்வம் பாலே (குழந்தாய் உன் பெயரென்ன)
அந்தச் சிறுமி பதிலளித்தாள் : காஞ்சனமாலா

கஸ்ய புத்ரி (நீ யாருடைய பெண்) : கனகலதாயா (கனகலதாவின்)
ஹஸ்தே கிம் தே (கையில் என்ன? ) : தாலி பத்ரம் (பனையோலை)
கா வா ரேகா (அதில் என்ன எழுதியிருக்கிறது) : க(1), க(2), க(3), க(4)'

என்று சொல்லிவிட்டு குதித்தோடிவிட்டாள் அந்தப் பெண். காளிதாஸன் மனதில் அந்த உரையாடலே ஒரு பாடலாக உருவாகிவிட்டது.

கா த்வம் பாலே ! காஞ்சன மாலா
கஸ்ய புத்ரி ! கனகலதாயா ஹஸ்தே கிம் தே ! தாலி பத்ரம் கா வா ரேகா ! க(1) க(2) க(3) க(4)

அரசனிடம் (வழக்கம்போல) இப்பாடலைச் சொல்லிப் பரிசு பெற்றுக்கொண்டான் காளிதாஸன் என்று சொல்லவும் வேண்டுமா

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியத்தில் பிரஸ்ன ஜோதிடம்

நமது இந்திய மரபைப் பொருத்தவரை வானவியலும் (astronomy) ஜோதிடமும் (astrology) ஒன்றொடொன்று பின்னிப்பிணைந்தே வந்திருக்கின்றன. வராஹமிகிரர் போன்ற சிறந்த வானவியலாளர்கள் சிறந்த ஜோதிடர்களாகவும் இருந்திருக்கிறார்கள். வேதங்களின் உறுப்பாக, அதாவது அங்கமாகவே ஜோதிட சாஸ்திரம் விளங்குகிறது. வேதத்திற்கு உள்ள ஆறு அங்கங்களில் ஒன்றே ஜோதிடம் என்று தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. போலவே வானியல், ஜோதிடம் ஆகிய இரண்டு துறைகளுக்கும் உள்ள தொடர்பு தமிழ் இலக்கியங்களிலும் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட பாடல் ஒன்றைப் பார்ப்போம். இதைப் பாடியவர் கூடலூர் கிழார். இந்தக் கூடலூர் சேர நாட்டில் இருந்த ஊர். இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றிலும் குறுந்தொகையிலும் உள்ளன.  ஒரு பங்குனி மாதத்தின் நடுப்பகுதி. மாலை மயங்கி இரவு புகும் நேரம் அது. கூடலூர் கிழார் அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்திருக்கிறார். இப்போது போல மின்விளக்குகள் வானத்தைச் சுத்தமாக மறைத்துவிடும் காலம் அல்ல அது. ஆகவே வானத்திலுள்ள விண்மீன்கள் அவருக்குத் தெளிவாகத் தெரிகின்றன. பங்குனி மாதம் என்பதால், சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கும் காலம

ராஜராஜனின் மெய்க்கீர்த்தி

பண்டைக்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும்  செப்பேடுகளையும் அவர்களது பரம்பரையைப் பற்றிய புகழுரைகளுடைன் ஆரம்பிப்பது வழக்கமாக இருந்தது.  பெரும்பாலும் இதில் புராணங்களிலிருந்தும், பல செயற்கரிய செயல்களை அவர்களது முன்னோர்கள் செய்ததாகவும் குறிப்பிடுவது உண்டு. கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி  'அடித்து விடுவது' சகஜம். உதாரணமாக பாண்டியர்களின் கல்வெட்டு ஒன்றில், ராமாயணம் நடந்த காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியன், ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் சமரசம் புரிந்து வைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போன்ற வெற்றுப் புகழுரைகளை விட்டு, மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக)  பொறிக்கும் வழக்கம், முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும்.  இந்த மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டுக்கல்வெட்டுகளிலிருந்து , அதாவது பொயு 993ஆம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள் , அவர்களது ஆட்சிக்காலத்தில்,

ராஜேந்திரரின் கடாரப் படையெடுப்பு

சோழர்களின் கடற்படையைப் பயன்படுத்தி பெரும் வெற்றிகளை பிற்காலச் சோழமன்னர்கள் பலர் ஈட்டியிருந்தாலும், ‘அலை கடல் நடுவே பல கலம் செலுத்தி’ என்று மெய்க்கீர்த்திகள் சிறப்பித்துக் கூறுவது ராஜேந்திரரின் வெற்றிகளைப் பற்றித்தான். இந்திய மன்னர்கள் யாரும் செய்யத் துணியாத விஷயத்தை அவர் செய்தார். கரடுமுரடான வங்கக் கடலைக் கடந்து தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான ஶ்ரீவிஜயத்தை நடுநடுங்கச் செய்தார். இதை அவர் சாதித்தது எப்படி? நிச்சயமில்லாத இந்தப் பயணத்தை சோழர்களின் கடற்படை எப்படி மேற்கொண்டது? அவர்களுக்கு உந்துதலாக இருந்தது எது? இவையெல்லாம் இன்றும் பதிலளிக்க முடியாத கேள்விகள். ஓரளவுக்கு சில அனுமானங்களை வைத்தே வரலாற்றாசிரியர்கள் இவற்றுக்கு விடையளித்து வருகிறார்கள்.  பிற்காலச் சோழர்களின் வலிமைமிக்க கடற்படைக்கு அடிகோலிய பெருமை பராந்தக சோழரையே சாரும். தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இலங்கை அரசர்களை வெல்வதற்காக கடற்படையை பலமுள்ளதாக அவர் உருவாக்கினார். அதன் துணைகொண்டு இலங்கையை வெல்லவும் செய்தார். ஆனால், இலங்கை வெற்றிகளைத் தொடர்ந்து கடற்படையை விரிவாக்கம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் சோழர்களுக்கு எதனால் வ