Tuesday 2 February 2016

தமிழ் எழுத்து வரிவடிவம் - பல்லவ கிரந்தம் 2

இதற்கு முன்னால் இருந்த தமிழ் பிராமியிலிருந்து சில மாறுதல்கள் செய்யப்பட்டு பல்லவ கிரந்தம் உருவாக்கப்பட்டது. இந்த முறையில் உயிர்மெய்யழுத்துக்கள் முழுமையாகப் பயன்படுத்தப் பட்டன. எழுத்துக்களின் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த வரிவடிவம் செயல்பாட்டில் வந்தது. தமிழின் இப்போதைய வரிவடிவத்தில் குறிலுக்கும் நெடிலுக்கும் பயன்படுத்தப் படும் சுழிகள் பல்லவ கிரந்தத்தில்தான் முதலில் பயனுக்கு வந்தது.
பல்லவர்களின் கடல் கடந்த வாணிகம் இவ்வகை எழுத்துக்களை  தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் கொண்டு சேர்த்தது. பர்மா, இந்தோனேசியா, தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளின் எழுத்து வடிவங்கள்  பல்லவகிரந்தத்தையே மூலமாகக் கொண்டவை. இந்தியாவில் மலையாள மொழியின் வரிவடிவத்துக்கும் இதுவே மூல வரிவடிவம்.

No comments:

Post a Comment