Skip to main content

சேரநாடும் தமிழும்



சேர நாட்டில் பேசப்பட்டு வந்த தமிழ் எப்படி மாறியது என்பதைப் பார்ப்பதற்கு முன்னால்,  சேர நாடு என்று சொல்லப்படும் நிலப்பரப்பைக் கவனிப்போம்.  தெற்கே நாகர்கோவிலிலிருந்து வடக்கே பாலக்காடுக் கணவாய் வரை சேர நாடு பரவியிருந்தது. அவர்களின் தலைநகரம் தற்போதைய கரூர் என்கிறார் ராகவையங்கார்.  இது விவாதத்திற்கு உட்பட்டே வந்தாலும், சேர நாடு பெரும்பாலும் புவியியல் ரீதியாக தமிழகத்தை விட தனித்தே இருந்தது. அதற்கு முக்கியக் காரணம் நடுவிலிருந்த மேற்குத் தொடர்ச்சி மலைதான். எனவே தமிழகத்தின் மற்ற இரு பேரரசுகளுக்கும் சேர நாட்டுக்கும் தொடர்பு குறைவாகவே இருந்தது. சங்க காலத்தைப் பொறுத்த வரை தமிழகத்தில்  சேர, சோழ, பாண்டிய நாடுகளைத் தவிர வேளிர்கள் என்ற குறுநில மன்னர்கள் ஆண்டு வந்தார்கள் என்பது நமக்குத் தெரிந்ததே.  இதில் சேர நாட்டின் தென்பகுதியில் ஆய் வேளிர் என்ற குறுநில மன்னர்கள் ஆண்டுவந்தார்கள். களப்பிரர்கள் படையெடுப்பின் போது மூவேந்தர்களும் மறைந்துவிட்டாலும் இந்த ஆய் வேளிர்கள் மட்டும் தங்களது ஆட்சியைத் தொடர்ந்தனர்.

பல்லவர்களும் பாண்டியர்களும் களப்பிரர் ஆட்சியை அகற்றிய போது, இயற்கைத் தடை இல்லாத சேர நாட்டின் வடபகுதியிலிருந்து கதம்பர்களும் கங்கர்களும் சாளுக்கியர்களும் சேர நாட்டின்மீது படையெடுத்துவந்தனர். அவர்களுடைய மொழியின் தாக்கத்தால் சேர நாட்டில் பேசப்பட்டுக்கொண்டிருந்த தமிழ் உருமாறத் தொடங்கியது. அதைத்தவிர பெரும் எண்ணிக்கையில்  சேர நாட்டின் வட பகுதியில் நம்பூதிரிப் பிராமணர்கள் வந்து குடியேறத் துவங்கினர்.  அவர்களுடைய வரலாறு அவர்கள் உத்தரப் பிரதேசத்திலிருந்து வந்ததாகத் தெரிவிக்கிறது. அவர்கள் பேசிய சமஸ்கிருத மொழி சேர நாட்டிலுள்ள தமிழுடன் கலந்து மலையாளம் உருவாகத் தொடங்கியது .  அவர்களும் அந்தப் பகுதியில் ஏற்கனவே இருந்தவர்களுடன் கலப்புத் திருமணங்கள் செய்துகொண்டதால், புது இனங்கள் உருவாயின. தாய் வழி உரிமை (மருமக்கள் தாயம்) சமூகக் கோட்பாடாக ஆகியது.

இதற்கு விதிவிலக்காக இருந்தது தென் சேர நாட்டில் ஆய் மன்னர்கள் ஆண்டுவந்த பகுதிதான். சங்க காலத்தில் குறு நில மன்னர்களாக இருந்த அவர்கள், களப்பிரர் காலத்திற்குப் பிறகு சுதந்திரமாக ஆட்சி செய்யத் தொடங்கினர்.  ஆனால் இடைக்காலப் பாண்டியர்களுக்கும் இவர்களுக்கும் இடையே போர்கள் நடைபெற்ற வண்ணம் இருந்தன. நெடுமாற பாண்டியன், கோச்சடையான் ரணதீரன் ஆகியோர் ஆய் மன்னர்களைத் தோற்கடித்தனர். முடிவில் ஜடில பராந்தகன் இவர்களை பாண்டிய நாட்டின் சிற்றரசர்களாக ஆக்கிவிட்டார்.

இதற்கிடையில் சேர நாட்டின் வட பகுதியில் குலசேகர வம்சம் ஆட்சியைப் பிடித்தது. இவர்களின் தோற்றத்தைப் பற்றி சரியான தகவல்கள் இல்லை. மகோதயம் (தற்போதைய கொடுங்கோளூர்) என்ற இடத்திலிருந்து ஆட்சி செய்யத் துவங்கிய இவர்களுக்கு நம்பூதிரிப் பிராமணர்களின் ஆதரவு இருந்தது. குலசேகர ஆழ்வார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோர் இந்த வம்சத்தில் வந்தவர்கள்தான். 'வர்மன்' என்ற பெயரை இவர்கள் ஆட்சிப் பெயராக வைத்துக்கொண்டனர். இவர்கள் ஆட்சியில் மலையாளம் மேலும் வளர்ச்சியடைந்தது. ஆதித்த சோழன் காலத்தில் சோழர்களுக்கு உதவியாக இருந்த இந்த சேர அரசர்கள், (ஸ்தாணு ரவி வர்மன்) பிற்பாடு பாண்டிய மன்னர்களுக்கு ஆதரவு தெரிவிக்கத் தொடங்கினர். ஆய் மன்னர்கள் மீது போரிட்டு அவர்களது நாட்டையும் கைப்பற்றிக்கொண்டனர். இதனால் மலையாளம் தென் சேர நாட்டிலும் பரவியது.

பிற்காலத்தில் ராஜராஜ சோழன், பாஸ்கர ரவி வர்மன் காலத்தில் சேர நாட்டின்மீது படையெடுத்து அவர்களின் முக்கியப்  படை கேந்திரங்களை அழித்த பிறகு, தமிழக அரசியலில் தலையிடாமல்  சேரர்கள் ஒதுங்கிக் கொண்டனர்.  தமிழும் அவர்களின் பேச்சு வழக்கிலிருந்து மறைந்து போயிற்று.

Comments

Post a Comment

Popular posts from this blog

தமிழ் இலக்கியத்தில் பிரஸ்ன ஜோதிடம்

நமது இந்திய மரபைப் பொருத்தவரை வானவியலும் (astronomy) ஜோதிடமும் (astrology) ஒன்றொடொன்று பின்னிப்பிணைந்தே வந்திருக்கின்றன. வராஹமிகிரர் போன்ற சிறந்த வானவியலாளர்கள் சிறந்த ஜோதிடர்களாகவும் இருந்திருக்கிறார்கள். வேதங்களின் உறுப்பாக, அதாவது அங்கமாகவே ஜோதிட சாஸ்திரம் விளங்குகிறது. வேதத்திற்கு உள்ள ஆறு அங்கங்களில் ஒன்றே ஜோதிடம் என்று தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. போலவே வானியல், ஜோதிடம் ஆகிய இரண்டு துறைகளுக்கும் உள்ள தொடர்பு தமிழ் இலக்கியங்களிலும் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட பாடல் ஒன்றைப் பார்ப்போம். இதைப் பாடியவர் கூடலூர் கிழார். இந்தக் கூடலூர் சேர நாட்டில் இருந்த ஊர். இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றிலும் குறுந்தொகையிலும் உள்ளன.  ஒரு பங்குனி மாதத்தின் நடுப்பகுதி. மாலை மயங்கி இரவு புகும் நேரம் அது. கூடலூர் கிழார் அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்திருக்கிறார். இப்போது போல மின்விளக்குகள் வானத்தைச் சுத்தமாக மறைத்துவிடும் காலம் அல்ல அது. ஆகவே வானத்திலுள்ள விண்மீன்கள் அவருக்குத் தெளிவாகத் தெரிகின்றன. பங்குனி மாதம் என்பதால், சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கும் காலம

ராஜராஜனின் மெய்க்கீர்த்தி

பண்டைக்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும்  செப்பேடுகளையும் அவர்களது பரம்பரையைப் பற்றிய புகழுரைகளுடைன் ஆரம்பிப்பது வழக்கமாக இருந்தது.  பெரும்பாலும் இதில் புராணங்களிலிருந்தும், பல செயற்கரிய செயல்களை அவர்களது முன்னோர்கள் செய்ததாகவும் குறிப்பிடுவது உண்டு. கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி  'அடித்து விடுவது' சகஜம். உதாரணமாக பாண்டியர்களின் கல்வெட்டு ஒன்றில், ராமாயணம் நடந்த காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியன், ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் சமரசம் புரிந்து வைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போன்ற வெற்றுப் புகழுரைகளை விட்டு, மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக)  பொறிக்கும் வழக்கம், முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும்.  இந்த மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டுக்கல்வெட்டுகளிலிருந்து , அதாவது பொயு 993ஆம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள் , அவர்களது ஆட்சிக்காலத்தில்,

ராஜேந்திரரின் கடாரப் படையெடுப்பு

சோழர்களின் கடற்படையைப் பயன்படுத்தி பெரும் வெற்றிகளை பிற்காலச் சோழமன்னர்கள் பலர் ஈட்டியிருந்தாலும், ‘அலை கடல் நடுவே பல கலம் செலுத்தி’ என்று மெய்க்கீர்த்திகள் சிறப்பித்துக் கூறுவது ராஜேந்திரரின் வெற்றிகளைப் பற்றித்தான். இந்திய மன்னர்கள் யாரும் செய்யத் துணியாத விஷயத்தை அவர் செய்தார். கரடுமுரடான வங்கக் கடலைக் கடந்து தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான ஶ்ரீவிஜயத்தை நடுநடுங்கச் செய்தார். இதை அவர் சாதித்தது எப்படி? நிச்சயமில்லாத இந்தப் பயணத்தை சோழர்களின் கடற்படை எப்படி மேற்கொண்டது? அவர்களுக்கு உந்துதலாக இருந்தது எது? இவையெல்லாம் இன்றும் பதிலளிக்க முடியாத கேள்விகள். ஓரளவுக்கு சில அனுமானங்களை வைத்தே வரலாற்றாசிரியர்கள் இவற்றுக்கு விடையளித்து வருகிறார்கள்.  பிற்காலச் சோழர்களின் வலிமைமிக்க கடற்படைக்கு அடிகோலிய பெருமை பராந்தக சோழரையே சாரும். தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இலங்கை அரசர்களை வெல்வதற்காக கடற்படையை பலமுள்ளதாக அவர் உருவாக்கினார். அதன் துணைகொண்டு இலங்கையை வெல்லவும் செய்தார். ஆனால், இலங்கை வெற்றிகளைத் தொடர்ந்து கடற்படையை விரிவாக்கம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் சோழர்களுக்கு எதனால் வ