தமிழ் பிராமிக்கு அடுத்து தமிழ் வரிவடிவமாக பரவலாகப் பயன்படுத்தப் பட்டது பல்லவ கிரந்தம். அதன் பெயர் தெரிவிப்பதைப் போலவே பல்லவர்களால் ஆறாம் நூற்றாண்டு வாக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது பல்லவ கிரந்தம்.
பல்லவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதைப் பற்றி பல்வேறு அபிப்பிராயங்கள் இருந்தாலும், முதலில் ஆட்சி செய்த பல்லவ அரசர்கள்
தமிழோடு சமஸ்கிருதத்தையும் ஆதரித்து வந்தார்கள் என்பது தெளிவு. காஞ்சியில் சமஸ்கிருதம் பயிற்றுவிக்கும் கடிகையும் இருந்தது. தண்டி எழுதிய தசகுமார சரிதம் போன்ற சமஸ்கிருத காவியங்களும் காஞ்சியிலே இயற்றப்பட்டன. இதனால் சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் ஏற்ற ஒரு வரிவடிவத்தைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் பல்லவர்களுக்கு இருந்தது. இது தவிர சமயம் சார்ந்தவர்களுக்கும் சாதாரணக் குடிமக்களுக்கும் ஏற்றவாறு ஒரு வரிவடிவத்தைத் தர வேண்டிய அவசியமும் அப்போது இருந்தது.
தமிழோடு சமஸ்கிருதத்தையும் ஆதரித்து வந்தார்கள் என்பது தெளிவு. காஞ்சியில் சமஸ்கிருதம் பயிற்றுவிக்கும் கடிகையும் இருந்தது. தண்டி எழுதிய தசகுமார சரிதம் போன்ற சமஸ்கிருத காவியங்களும் காஞ்சியிலே இயற்றப்பட்டன. இதனால் சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் ஏற்ற ஒரு வரிவடிவத்தைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் பல்லவர்களுக்கு இருந்தது. இது தவிர சமயம் சார்ந்தவர்களுக்கும் சாதாரணக் குடிமக்களுக்கும் ஏற்றவாறு ஒரு வரிவடிவத்தைத் தர வேண்டிய அவசியமும் அப்போது இருந்தது.
மேலே பார்ப்போம்
No comments:
Post a Comment