Sunday 31 January 2016

தமிழ் எழுத்து வரிவடிவம் - பிராமி 1

கல்தோன்றி மண்தோன்றா காலத்து மூத்தகுடி என்று பேசப்பட்டாலும் தமிழ் ஆரம்பக்காலங்களில் பிற இந்திய மொழிகளைப் போலவே பேச்சு
மொழியாகவே இருந்திருக்கிறது. அதற்கான முதல் எழுத்துவரிவடிவம் என்று பார்த்தல் அது தமிழ் பிராமி என்று சொல்லப்படும் எழுத்துவரிவடிவமாகும்.
இந்த தமிழ் பிராமியின் மூல எழுத்து வடிவம் அசோகர் காலத்தில் பிரபலமான வடஇந்தியாவின் பிராமி என்று சொல்லப்படுகிறது. இது விஷயத்தில் கருத்து வேறுபாடு இருந்தாலும் பெரும்பாலான ஆசிரியர்கள் இந்த முடிவோடு ஒத்துப்போகிறார்கள். இந்த பிராமி எழுத்துமுறையின் துவக்கமே  இன்னும் சரிபடத் தெரியவில்லை. ஒரு சிலர் அரமைக் என்று சொல்லப்படும் மத்தியக் கிழக்கு நாடுகளில் இருந்து இது இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்கிறார்கள். இன்னும் சிலர், இன்னும் அர்த்தம் அறிய முடியாத, சிந்து சமவெளி எழுத்து வடிவத்தின் பிற்கால மாற்றமே பிராமியாக உருவெடுத்து வந்தது என்றும் சொல்கின்றனர். இதனுடைய காலத்தைப் பொருத்தவரை பொ.வ.மு 5ம் நூற்றாண்டாக  இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் பார்ப்போம்

No comments:

Post a Comment