Skip to main content

தமிழ் எழுத்து வரிவடிவம் – பிராமி 3

தமிழ் பிராமி எழுத்துக்களின் வளர்ச்சியை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம் என்று பார்த்தோம். இந்த மூன்று பிரிவையும் Stage I, Stage II  மற்றும் Stage III என்று அழைக்கிறார்கள். இந்த மூன்று பிரிவுகளுக்குள்ள வேறுபாடு அடிப்படையில் உயிரெழுத்து மற்றும் உயிர்மெய் எழுத்துக்களின் வரிவடிவங்களில் உள்ளது.  உதாரணமாக 'ந' என்ற குறில் எழுத்து முதல்
முறையில் (Stage I)  கீழே உள்ளது போல எழுதப்படும்.

Tab1

இது ஒரு உயிர்மெய் எழுத்து என்பதைக் குறிக்க ஒரு சிறிய கோடு மேலே உள்ளதைக் கவனிக்கவும். இதுவே நா என்ற நெடிலாக எழுதப்படும்போது பக்கத்தில் ஒரு 'அ' சேர்க்கப்படும்
இரண்டாவது முறையில் 'ந்' என்ற மெய்யெழுத்துக்கும் 'ந' என்ற உயிர்மெய் எழுத்துக்கும் ஒரே வரி வடிவம்தான், கீழே உள்ளது போல.
Tab2
நா என்ற நெடிலை எழுதவேண்டுமானால் முதல் முறையில் பார்த்தது போல மேலே ஒரு சிறிய கோடு இடப்படும். இப்படி மெய்யெழுத்தையும் உயிர்மெய்யெழுத்தையும் ஒரே வரிவடிவத்தில் எழுதும் முறை அசோகரின் பிராமி (பிராகிருத) வடிவத்திலும் உண்டு. இதை ஆதாரமாக வைத்து தமிழ் பிராமி அசோகரின் பிராமி வரிவடிவத்துக்கு முற்பட்டது என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சரி மூன்றாவது வடிவத்தில் என்ன வேறுபாடு. இது நாம் இப்போது தமிழை எழுதும் முறைப்படி, மெய்யெழுத்துக்களை வேறுபட்டுக் காண்பிக்க, ஒரு புள்ளியை அருகில் வைக்கும் வழக்கத்தைக் கொண்டது. உதாரணமாக ந் என்ற மெய்யெழுத்து இவ்வாறு எழுதப்படும்.
Tab3
எனவே தமிழ் பிராமி கல்வெட்டுக்களைப் படிப்பதற்கு முதலில் அவை எந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவை என்று அறியவேண்டும். இல்லையெனில் எழுத்துக்கள் தவறான முறையில் படிக்கப்பட்டுவிடும்.
மேலும் ............

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியத்தில் பிரஸ்ன ஜோதிடம்

நமது இந்திய மரபைப் பொருத்தவரை வானவியலும் (astronomy) ஜோதிடமும் (astrology) ஒன்றொடொன்று பின்னிப்பிணைந்தே வந்திருக்கின்றன. வராஹமிகிரர் போன்ற சிறந்த வானவியலாளர்கள் சிறந்த ஜோதிடர்களாகவும் இருந்திருக்கிறார்கள். வேதங்களின் உறுப்பாக, அதாவது அங்கமாகவே ஜோதிட சாஸ்திரம் விளங்குகிறது. வேதத்திற்கு உள்ள ஆறு அங்கங்களில் ஒன்றே ஜோதிடம் என்று தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. போலவே வானியல், ஜோதிடம் ஆகிய இரண்டு துறைகளுக்கும் உள்ள தொடர்பு தமிழ் இலக்கியங்களிலும் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட பாடல் ஒன்றைப் பார்ப்போம். இதைப் பாடியவர் கூடலூர் கிழார். இந்தக் கூடலூர் சேர நாட்டில் இருந்த ஊர். இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றிலும் குறுந்தொகையிலும் உள்ளன.  ஒரு பங்குனி மாதத்தின் நடுப்பகுதி. மாலை மயங்கி இரவு புகும் நேரம் அது. கூடலூர் கிழார் அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்திருக்கிறார். இப்போது போல மின்விளக்குகள் வானத்தைச் சுத்தமாக மறைத்துவிடும் காலம் அல்ல அது. ஆகவே வானத்திலுள்ள விண்மீன்கள் அவருக்குத் தெளிவாகத் தெரிகின்றன. பங்குனி மாதம் என்பதால், சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கும் காலம

ராஜராஜனின் மெய்க்கீர்த்தி

பண்டைக்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும்  செப்பேடுகளையும் அவர்களது பரம்பரையைப் பற்றிய புகழுரைகளுடைன் ஆரம்பிப்பது வழக்கமாக இருந்தது.  பெரும்பாலும் இதில் புராணங்களிலிருந்தும், பல செயற்கரிய செயல்களை அவர்களது முன்னோர்கள் செய்ததாகவும் குறிப்பிடுவது உண்டு. கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி  'அடித்து விடுவது' சகஜம். உதாரணமாக பாண்டியர்களின் கல்வெட்டு ஒன்றில், ராமாயணம் நடந்த காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியன், ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் சமரசம் புரிந்து வைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போன்ற வெற்றுப் புகழுரைகளை விட்டு, மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக)  பொறிக்கும் வழக்கம், முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும்.  இந்த மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டுக்கல்வெட்டுகளிலிருந்து , அதாவது பொயு 993ஆம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள் , அவர்களது ஆட்சிக்காலத்தில்,

ராஜேந்திரரின் கடாரப் படையெடுப்பு

சோழர்களின் கடற்படையைப் பயன்படுத்தி பெரும் வெற்றிகளை பிற்காலச் சோழமன்னர்கள் பலர் ஈட்டியிருந்தாலும், ‘அலை கடல் நடுவே பல கலம் செலுத்தி’ என்று மெய்க்கீர்த்திகள் சிறப்பித்துக் கூறுவது ராஜேந்திரரின் வெற்றிகளைப் பற்றித்தான். இந்திய மன்னர்கள் யாரும் செய்யத் துணியாத விஷயத்தை அவர் செய்தார். கரடுமுரடான வங்கக் கடலைக் கடந்து தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான ஶ்ரீவிஜயத்தை நடுநடுங்கச் செய்தார். இதை அவர் சாதித்தது எப்படி? நிச்சயமில்லாத இந்தப் பயணத்தை சோழர்களின் கடற்படை எப்படி மேற்கொண்டது? அவர்களுக்கு உந்துதலாக இருந்தது எது? இவையெல்லாம் இன்றும் பதிலளிக்க முடியாத கேள்விகள். ஓரளவுக்கு சில அனுமானங்களை வைத்தே வரலாற்றாசிரியர்கள் இவற்றுக்கு விடையளித்து வருகிறார்கள்.  பிற்காலச் சோழர்களின் வலிமைமிக்க கடற்படைக்கு அடிகோலிய பெருமை பராந்தக சோழரையே சாரும். தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இலங்கை அரசர்களை வெல்வதற்காக கடற்படையை பலமுள்ளதாக அவர் உருவாக்கினார். அதன் துணைகொண்டு இலங்கையை வெல்லவும் செய்தார். ஆனால், இலங்கை வெற்றிகளைத் தொடர்ந்து கடற்படையை விரிவாக்கம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் சோழர்களுக்கு எதனால் வ