Sunday 31 January 2016

தமிழ் எழுத்து வரிவடிவம் - பிராமி 2

அசோகர் காலத்து பிராமி புத்த, சமண துறவிகளால் தமிழகத்துக்குக் கொண்டுவரப்பட்டு மாற்றம் செய்யப்பட்டது என்ற கருத்தை ஒப்புக்கொண்டோமானால் , எழுத்துக்களை வடமொழியான பிராகிருதத்திலிருந்து தமிழுக்கு ஏற்றவாறு அமைக்க சில மாறுதல்கள்
செய்யப்பட்டிருக்க வேண்டும். உதாரணமாக தமிழில் ஒரே எழுத்து நான்கு உச்சரிப்புகளில் வருவது இல்லை, (ka, kka, Ga, GGA) என்று வடமொழியில் வருவது போல.
ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் தமிழ் பிராமியின் வளர்ச்சியை மூன்று  காலகட்டங்களாக பிரிக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார். முதலாவது பொ.வ. மு. 3ம் நூற்றாண்டிலிருந்து 1ம் நூற்றாண்டு வரை. இரண்டாவது பொ.வ.1லிருந்து 2ம் நூற்றாண்டு. மூன்றாவது காலகட்டம் பொ. வ. 2லிருந்து 4ம் நூற்றாண்டு வரை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும், கர்நாடக ஆந்திர மாநிலங்களின் தென்பகுதியிலும் ஏன் இலங்கையிலும் கூட நமக்குக்  கிடைத்திருக்கின்றன. எந்த வகையில் இந்த எழுத்துவரி வடிவம் மாறுபடுகின்றது?  இதன் வரிவடிவம் எப்படி இருக்கும் என்றெல்லாம் தொடர்ந்து பார்ப்போம்

No comments:

Post a Comment