Skip to main content

சித்திரைத் திருவிழா - நிறைவு

திருமலை மன்னருக்குப் பிறகு மதுரை பல ஆட்சி மாற்றங்களையும் எண்ணற்ற சிக்கல்களையும் குழப்பங்களையும் கண்டது. ஆனாலும் அவர் ஏற்படுத்திய கட்டளைப் படி திருவிழாக்களும் அதில் உள்ள நடைமுறைகளும் இன்றளவும் தொடர்ந்து வருகின்றன. திருவிழாக்களை ஏற்படுத்தியதோடு மற்றும் நின்றுவிடவில்லை அவர், மீனாட்சி கோவிலிலும், அழகர் கோவிலிலும், திருப்பரங்குன்றத்திலும் எண்ணற்ற திருப்பணிகள் செய்தார் அவர். சிதிலமடைந்த பகுதிகளை எல்லாம் செப்பனிட்டார்.  சாதாரணமாக சுண்ணம் சேர்த்து அதனால் செய்த கலவைகளை வைத்து செப்பனிடுவதற்குப் பதிலாக, கடற்சங்குகளை சுட்டு, அரைத்து அதனால் செய்யப்பட்ட விசேஷமான கலவைகளைப் பயன்படுத்தினார்.

ஒரு ஆட்சியாளராக திருமலை நாயக்கர் மீது எண்ணற்ற விமரிசனங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு பக்தராக அவர் அரும்பணி ஆற்றியிருக்கிறார். ஹிந்து மதத்தை மட்டும் அல்லாமல், மற்ற மதங்களையும் அரவணைத்தே சென்றிருக்கிறார். சைவ வைணவ ஒற்றுமைக்கு அடிகோலி, எல்லா பிரிவைச் சேர்ந்த தெய்வங்களையும் சித்திரைத் திருவிழாவில் பங்குபெறச் செய்ததன் மூலம், சில்லறை மதச்சண்டைகளை ஒழித்துக்கட்டி மக்களிடையே ஒற்றுமையுணர்வை ஓங்கச் செய்தார். தானே அதற்கு முன்னுதாரணமாகவும் வாழ்ந்து காட்டினார்.

இந்தத் திருவிழா ஒருங்கிணைப்புகளையும் திருப்பணிகளையும் அவர் தான் தோன்றித்தனமாக, சர்வாதிகாரியைப் போல் செய்யவில்லை. தமது குருவும், சாக்த உபாசகரும், ஆகம விற்பன்னருமான நீலகண்ட தீட்சதர், கோவில் ஸ்தானீக பட்டர்கள் ஆகியோரின் ஆலோசனைகளைக் கேட்டே செய்தார். அதனால்தான் அவர் பெயர் சொல்லும் அளவில் இன்று வரை சித்திரைப் பெருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.


ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து வைகையாற்றில் இறங்கும் கள்ளழகர் 

மதுரை நகரில் இரண்டு கோபுரங்களைக் கட்டியதைப் பற்றி சொன்னீர்கள், மற்ற இரண்டு கோபுரங்களும் எப்போது கட்டப்பட்டன என்று ஒருவர் கேட்டிருந்தார். தெற்கு கோபுரத்தை 14ம் நூற்றாண்டின் மத்தியில் சிராப்பள்ளில் சிவத்தலிங்கம் செட்டி என்பவர் கட்டியிருக்கிறார் என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.  வடக்கு கோபுரத்தை நாயக்கர்கள் கட்ட முயன்று பாதியில் அந்தப் பணி நின்று போய் விட்டது.  அதனால் அது மொட்டைக் கோபுரம் என்று அழைக்கப்பட்டது. பின்னாளில், 19ம் நூற்றாண்டில், அன்பர்கள் பலரால் அந்தப் பணி நிறைவு செய்யப்பட்டது.

இந்தத் தொடரை இவ்வளவு நாள் பொறுமையுடன் படித்து வந்து, ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.










Comments

  1. அருமையான தொடர். நல்ல பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். நன்றி :-}

    amas32

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழ் இலக்கியத்தில் பிரஸ்ன ஜோதிடம்

நமது இந்திய மரபைப் பொருத்தவரை வானவியலும் (astronomy) ஜோதிடமும் (astrology) ஒன்றொடொன்று பின்னிப்பிணைந்தே வந்திருக்கின்றன. வராஹமிகிரர் போன்ற சிறந்த வானவியலாளர்கள் சிறந்த ஜோதிடர்களாகவும் இருந்திருக்கிறார்கள். வேதங்களின் உறுப்பாக, அதாவது அங்கமாகவே ஜோதிட சாஸ்திரம் விளங்குகிறது. வேதத்திற்கு உள்ள ஆறு அங்கங்களில் ஒன்றே ஜோதிடம் என்று தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. போலவே வானியல், ஜோதிடம் ஆகிய இரண்டு துறைகளுக்கும் உள்ள தொடர்பு தமிழ் இலக்கியங்களிலும் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட பாடல் ஒன்றைப் பார்ப்போம். இதைப் பாடியவர் கூடலூர் கிழார். இந்தக் கூடலூர் சேர நாட்டில் இருந்த ஊர். இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றிலும் குறுந்தொகையிலும் உள்ளன.  ஒரு பங்குனி மாதத்தின் நடுப்பகுதி. மாலை மயங்கி இரவு புகும் நேரம் அது. கூடலூர் கிழார் அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்திருக்கிறார். இப்போது போல மின்விளக்குகள் வானத்தைச் சுத்தமாக மறைத்துவிடும் காலம் அல்ல அது. ஆகவே வானத்திலுள்ள விண்மீன்கள் அவருக்குத் தெளிவாகத் தெரிகின்றன. பங்குனி மாதம் என்பதால், சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கும் காலம

ராஜராஜனின் மெய்க்கீர்த்தி

பண்டைக்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும்  செப்பேடுகளையும் அவர்களது பரம்பரையைப் பற்றிய புகழுரைகளுடைன் ஆரம்பிப்பது வழக்கமாக இருந்தது.  பெரும்பாலும் இதில் புராணங்களிலிருந்தும், பல செயற்கரிய செயல்களை அவர்களது முன்னோர்கள் செய்ததாகவும் குறிப்பிடுவது உண்டு. கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி  'அடித்து விடுவது' சகஜம். உதாரணமாக பாண்டியர்களின் கல்வெட்டு ஒன்றில், ராமாயணம் நடந்த காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியன், ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் சமரசம் புரிந்து வைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போன்ற வெற்றுப் புகழுரைகளை விட்டு, மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக)  பொறிக்கும் வழக்கம், முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும்.  இந்த மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டுக்கல்வெட்டுகளிலிருந்து , அதாவது பொயு 993ஆம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள் , அவர்களது ஆட்சிக்காலத்தில்,

ராஜேந்திரரின் கடாரப் படையெடுப்பு

சோழர்களின் கடற்படையைப் பயன்படுத்தி பெரும் வெற்றிகளை பிற்காலச் சோழமன்னர்கள் பலர் ஈட்டியிருந்தாலும், ‘அலை கடல் நடுவே பல கலம் செலுத்தி’ என்று மெய்க்கீர்த்திகள் சிறப்பித்துக் கூறுவது ராஜேந்திரரின் வெற்றிகளைப் பற்றித்தான். இந்திய மன்னர்கள் யாரும் செய்யத் துணியாத விஷயத்தை அவர் செய்தார். கரடுமுரடான வங்கக் கடலைக் கடந்து தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான ஶ்ரீவிஜயத்தை நடுநடுங்கச் செய்தார். இதை அவர் சாதித்தது எப்படி? நிச்சயமில்லாத இந்தப் பயணத்தை சோழர்களின் கடற்படை எப்படி மேற்கொண்டது? அவர்களுக்கு உந்துதலாக இருந்தது எது? இவையெல்லாம் இன்றும் பதிலளிக்க முடியாத கேள்விகள். ஓரளவுக்கு சில அனுமானங்களை வைத்தே வரலாற்றாசிரியர்கள் இவற்றுக்கு விடையளித்து வருகிறார்கள்.  பிற்காலச் சோழர்களின் வலிமைமிக்க கடற்படைக்கு அடிகோலிய பெருமை பராந்தக சோழரையே சாரும். தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இலங்கை அரசர்களை வெல்வதற்காக கடற்படையை பலமுள்ளதாக அவர் உருவாக்கினார். அதன் துணைகொண்டு இலங்கையை வெல்லவும் செய்தார். ஆனால், இலங்கை வெற்றிகளைத் தொடர்ந்து கடற்படையை விரிவாக்கம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் சோழர்களுக்கு எதனால் வ