Skip to main content

சித்திரைத் திருவிழா - 9

தாம் செய்த வலுவான தேர்களை இழுக்க போதுமான ஆட்கள் கிடைக்கவில்லையே என்ற யோசனையில் ஆழ்ந்திருக்கும் திருமலை நாயக்கரை அப்படியே விட்டுவிட்டு, மதுரைக்கு வட கிழக்கில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் அழகர் மலைக்குச் செல்வோம்.

திருமாலிருஞ்சோலை, அழகர்மலை என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த வைணவத்தலம் புராதனமான வரலாற்றை உடையது. இந்தக் கோவிலில் உறையும் சுந்தரராஜப் பெருமாள் ஆழ்வார்களால்  மங்களாசாசனம் செய்யப்பட்டவர். 'சுந்தரத் தோளுடையான்' என்று ஆண்டாள் இவரை அழைக்கிறார். பரிபாடலில் இந்தத் தலத்தைப் பற்றிய குறிப்புகள் உண்டு. சிலப்பதிகாரத்தில் காடு காண் காதையில் மதுரைக்குச் செல்லும் மூன்று வழிகளில் ஒன்றாக திருமால் குன்ற வழியை மாங்காட்டு மறையவன் உரைக்கின்றான். அங்கேயுள்ள சிலம்பாற்றைப் பற்றியும் கூறுகின்றான்.

இப்படிப் பல சிறப்புகள் கொண்ட அழகர் கோவில், சிறு தெய்வம், பெரும் தெய்வம் என்று சிலர் இப்போது அடிக்கும் ஜல்லிக்கு எல்லாம் அப்பாற்பட்டது. இந்த ஊரைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கெல்லாம் அழகர்தான் குல தெய்வம். அவர்களால் கள்ளழகர் என்று அன்போடு அழைப்படுபவர் இவர். அதே சமயம், கிராம தேவதையாகக் கருதப்படும் கருப்பண்ணசாமிக்குத் தான் இந்தக் கோவிலில் முதற்பூசை.  பதினெட்டாம்படிக் கருப்பண்ணசாமியாக இங்கு அருள்பாலிக்கும் அவருக்கு முறையான பூஜைகள் செய்த பிறகே அழகர் வெளியே கிளம்புவார். இக்கோவிலின் இன்னொரு சிறப்பு, உற்சவ மூர்த்தியான சுந்தர ராஜப் பெருமாள், அபரஞ்சி என்னும் ஆயிரத்தெட்டு மாற்றுப் பொன்னால் செய்யப்பட்டவர். இப்போது நாம் சுத்தத் தங்கம் என்று சொல்லும் பொன் பத்தரை மாற்று, அதாவது பத்து பங்கு தங்கத்திற்கு அரைப்பங்கு செம்பு சேர்த்துச் செய்யப்பட்டது. அப்படியானால் அபரஞ்சிப் பொன் எவ்வளவு தூய்மையான தங்கம் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.




ஒன்பதாம் திருநாளில் திக்விஜயம் புறப்படும் மீனாட்சியம்மையும் அவருடன் போர்புரியத் தயாராகும் சொக்கநாதரும்

இந்த அழகர் கோவிலைப் பற்றிச் சொல்லப்படும் புராணக் கதை ஒன்று உண்டு. இங்கேயுள்ள சிலம்பாற்றில் சுதபஸ் என்னும் முனிவர் நீராடிக் கொண்டிருந்தபோது அங்கே வந்த துர்வாசரைக் கவனியாது இருந்துவிட்டதால் அவரைத் தவளையாகுமாறு துர்வாசர் சபித்துவிட்டார். அவர் சாப விமோசனம் வேண்டவே, வைகையாற்றில் தவம் செய்யுமாறும் அங்கே அழகர் பெருமான் வந்து சாப விமோசனம் அளிப்பார் என்றும் கூறிச்சென்றார். அதன்படியே வைகையாற்றில் தவம் செய்துகொண்டிருந்த முனிவருக்கு அழகர் காட்சி தந்து சாப விமோசனம் அளித்தார்.

இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு சித்திரை மாதமும் சித்ரா பௌர்ணமி அன்று வைகையாற்றின் கரையில், மதுரைக்கு வடமேற்கில், சமயநல்லூருக்கும் சோழவந்தானுக்கும் இடையில் உள்ள,  தேனூர் என்ற ஊரில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதற்காக மலையிலிருந்து அழகர் புறப்பட்டு அலங்காநல்லூர் வழியாக தேனூர் வரை வருவார். அச்சமயம் அக்கம் பக்கத்து கிராமங்களிலிருந்து பெரும் திரளான மக்கள் அழகரைச் சந்திக்கப் புறப்பட்டு வருவார்கள். கள்ளர் வேடமணிந்து அழகரை வழிபடுவார்கள்.

இந்த மக்கள் கூட்டத்தை மதுரைத் தேர்த்திருவிழாவுக்காக பயன்படுத்திக்கொள்ள மாஸ்டர் பிளான்  ஒன்றைத் தீட்டினார் திருமலை நாயக்கர்.
                                                                                                                                            அது ......



படங்கள் நன்றி - ஸ்டாலின் ஃபோட்டோகிராஃபி

உசாத்துணைகள்
1.  History of Nayaks of Madura - R Sathyanatha Aiyar
2.   Madurai through the ages - Devakunjari

Comments

Popular posts from this blog

தமிழ் இலக்கியத்தில் பிரஸ்ன ஜோதிடம்

நமது இந்திய மரபைப் பொருத்தவரை வானவியலும் (astronomy) ஜோதிடமும் (astrology) ஒன்றொடொன்று பின்னிப்பிணைந்தே வந்திருக்கின்றன. வராஹமிகிரர் போன்ற சிறந்த வானவியலாளர்கள் சிறந்த ஜோதிடர்களாகவும் இருந்திருக்கிறார்கள். வேதங்களின் உறுப்பாக, அதாவது அங்கமாகவே ஜோதிட சாஸ்திரம் விளங்குகிறது. வேதத்திற்கு உள்ள ஆறு அங்கங்களில் ஒன்றே ஜோதிடம் என்று தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. போலவே வானியல், ஜோதிடம் ஆகிய இரண்டு துறைகளுக்கும் உள்ள தொடர்பு தமிழ் இலக்கியங்களிலும் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட பாடல் ஒன்றைப் பார்ப்போம். இதைப் பாடியவர் கூடலூர் கிழார். இந்தக் கூடலூர் சேர நாட்டில் இருந்த ஊர். இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றிலும் குறுந்தொகையிலும் உள்ளன.  ஒரு பங்குனி மாதத்தின் நடுப்பகுதி. மாலை மயங்கி இரவு புகும் நேரம் அது. கூடலூர் கிழார் அவரது வீட்டை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்திருக்கிறார். இப்போது போல மின்விளக்குகள் வானத்தைச் சுத்தமாக மறைத்துவிடும் காலம் அல்ல அது. ஆகவே வானத்திலுள்ள விண்மீன்கள் அவருக்குத் தெளிவாகத் தெரிகின்றன. பங்குனி மாதம் என்பதால், சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கும் காலம

ராஜராஜனின் மெய்க்கீர்த்தி

பண்டைக்காலத்தில் தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகளையும்  செப்பேடுகளையும் அவர்களது பரம்பரையைப் பற்றிய புகழுரைகளுடைன் ஆரம்பிப்பது வழக்கமாக இருந்தது.  பெரும்பாலும் இதில் புராணங்களிலிருந்தும், பல செயற்கரிய செயல்களை அவர்களது முன்னோர்கள் செய்ததாகவும் குறிப்பிடுவது உண்டு. கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், மன்னர்கள் அபிமானத்தைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி  'அடித்து விடுவது' சகஜம். உதாரணமாக பாண்டியர்களின் கல்வெட்டு ஒன்றில், ராமாயணம் நடந்த காலத்தில் ஆட்சிபுரிந்த பாண்டியன், ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் சமரசம் புரிந்து வைத்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது போன்ற வெற்றுப் புகழுரைகளை விட்டு, மன்னர்கள் அடைந்த வெற்றிகளை மெய்க்கீர்த்திகளாக (உண்மையான புகழாக)  பொறிக்கும் வழக்கம், முதலாம் ராஜராஜன் காலத்தில் தோன்றியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவாகும்.  இந்த மெய்க்கீர்த்திகள் அகவற்பாவில் அமைந்துள்ளன. முதலாம் ராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் ஆண்டுக்கல்வெட்டுகளிலிருந்து , அதாவது பொயு 993ஆம் ஆண்டிலிருந்து இவை காணப்படுகின்றன. இந்த மெய்க்கீர்த்திகள் , அவர்களது ஆட்சிக்காலத்தில்,

ராஜேந்திரரின் கடாரப் படையெடுப்பு

சோழர்களின் கடற்படையைப் பயன்படுத்தி பெரும் வெற்றிகளை பிற்காலச் சோழமன்னர்கள் பலர் ஈட்டியிருந்தாலும், ‘அலை கடல் நடுவே பல கலம் செலுத்தி’ என்று மெய்க்கீர்த்திகள் சிறப்பித்துக் கூறுவது ராஜேந்திரரின் வெற்றிகளைப் பற்றித்தான். இந்திய மன்னர்கள் யாரும் செய்யத் துணியாத விஷயத்தை அவர் செய்தார். கரடுமுரடான வங்கக் கடலைக் கடந்து தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான ஶ்ரீவிஜயத்தை நடுநடுங்கச் செய்தார். இதை அவர் சாதித்தது எப்படி? நிச்சயமில்லாத இந்தப் பயணத்தை சோழர்களின் கடற்படை எப்படி மேற்கொண்டது? அவர்களுக்கு உந்துதலாக இருந்தது எது? இவையெல்லாம் இன்றும் பதிலளிக்க முடியாத கேள்விகள். ஓரளவுக்கு சில அனுமானங்களை வைத்தே வரலாற்றாசிரியர்கள் இவற்றுக்கு விடையளித்து வருகிறார்கள்.  பிற்காலச் சோழர்களின் வலிமைமிக்க கடற்படைக்கு அடிகோலிய பெருமை பராந்தக சோழரையே சாரும். தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இலங்கை அரசர்களை வெல்வதற்காக கடற்படையை பலமுள்ளதாக அவர் உருவாக்கினார். அதன் துணைகொண்டு இலங்கையை வெல்லவும் செய்தார். ஆனால், இலங்கை வெற்றிகளைத் தொடர்ந்து கடற்படையை விரிவாக்கம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் சோழர்களுக்கு எதனால் வ